மார்ச் 27, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 26

मोदितमधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम्
आदृतकाञ्चीखेलनमादिममारुण्यभेदमाकलये 26

மோதித மதுகர விசிகம் ஸ்வாதிம ஸமுதாய ஸார கோதண்டம் |
ஆத்ருத காஞ்சீ கேலனம் ஆதிமம் ஆருண்யபேதம் ஆகலயே ||  (26)

மலரம்புகளை தன்கையில் வண்டுகள் இன்புற்றிருக்கக் கொண்டவள்; ஈதனைய இனிப்பில்லை என்னுபடியான கோதண்ட வில்லைக் கொண்டவள் (கரும்பு வில்); புண்ணிய காஞ்சீ தலத்தில் தம் விளையாடல்களைச் செய்வதில் ஆர்வமுள்ளவள்;; எல்லாவற்றுக்கும் துலக்கமாகன ஆதியை, தூய சிவப்பு நிறத்ததை நெஞ்சில் இருத்தி துதிக்கின்றேன், தியானிக்கின்றேன்.

மலர்பாணம் கொண்டனள் வண்டுகள் இன்பில் மகிழ்ந்திருக்க;
இலையிணை என்றே இனித்திடும் வில்லினை ஏந்தியவள்;
தலமது காஞ்சியில் தாம்விளை யாடிடும் தாயவளை
துலங்கும் முதலை, இராகத் தினையுள் இருத்தினனே

இலங்கும்-மின்னும் முதலை- முதற்பொருளை; இராகம் - சிவப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...