மார்ச் 30, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 29

स्मयमानमुखं काञ्चीभयमानं कमपि देवताभेदम्
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः 29

ஸ்மயமான முகம் காஞ்சீமயமானம் கமபி தேவதாபேதம் |
தயமானம் வீக்ஷ்ய முஹூர் வயம் ஆனந்தாம்ருதாம்புதௌ மக்னா: ||  (29)

சிரித்த முகத்தையுடையதும், காஞ்சீபுரியாகவே நிறைந்து விளங்குவதும், கருணை நிரம்பப்பெற்றதுமான,  ஒரு தேவதையை அடிக்கடி பார்த்து நாம் ஆனந்தமெனும் அமுதக் கடலில் ஆழ்ந்துவிட்டோம்

சிரித்த முகத்தாளாம் சீர்மிகு காஞ்சியைச் சேர்ந்தவளாம்
புரியும் கருணையாய் பொங்கி நிரம்பியே போந்தவளாம்
துரியளாம் தேவதைத் துங்கத்தைக் கண்டதில் தோய்ந்துமேநாம்
அரியவா னந்தமாம் ஆழியில் ஆழ்ந்தோம் அடிக்கடியே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...