அக்டோபர் 31, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -4

ஏதோ பல நூற்றாண்டு காலங்கள் வாழ்ந்திருக்கப்போகிறோம் என்று பலரும் ஆடும் கூத்து சங்ககாலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. நல்லோரை சேர்ந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, வயதாகி கிழத்தன்மை வருவதும், முடிவில் இறப்பதும் எல்லோருக்கும் நேர்வது, அதனால் அவற்றை மறந்திருக்கும் அறிவில்லார் கூட்டை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் கலித்தொகை வரிகள்..
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
மாற்றுமை கொண்ட வழி.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 12 : 18 – 19
இவ்வரிகளின் உள்ளுரைக் கருத்து:
நமக்கு வருகின்ற கூற்றத்தையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழிச் செல்லாமல், அவ்வழியினின்று விலகி நன்மக்கள் வழியினை நினக்கு வழியாகப் பேணவும்.
இன்றும் இதே காட்சியைத்தானே வேறு வேறு விதங்களில் பார்க்கிறோம்.. எத்தனைச் சொன்னால்தான் என்ன? எத்தர்களை மாற்றுவேன் என்பது நம்மையே ஏமாற்றிக்கொள்வதுதானோ! ஆனாலும் ஆறுதல் என்னவென்றால்… மனிதன் மாறிவிட்டான் என்பது உண்மையல்ல. மனிதன் அன்றேபோல் இன்றும்.. என்றும்! 
அன்றும் நல்லுரைகள் தேவைப்பட்டன! இன்றும் அதே சங்கை நாமும் ஊதுவோம். கொள்ளுவோர் கொள்ளட்டும்.
என்றும் இருப்பார்போல் எத்தனை ஆட்டங்கள்
இன்றுளார் நாளை இருப்பாரோ? - தின்றுநம்மை
திண்ணமாய் காலனும் மூப்பும் அழிக்குமே
எண்ணியதை நல்லோரைக் கூடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...