அக்டோபர் 31, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -5

சமீபத்திய பருப்பு பதுக்கலைப் பற்றி எல்லோரும் படித்திருப்போம். பதுக்கல் என்பதும் காலம் காலமாக நடந்துவரும் ஒரு இழிச்செயல்தான் என்பதற்கு கீழ்வரும் கலித்தொகைப் பாடல் வரிகளே சான்று.

இப்பதுக்கல்களுக்குப் பின்னால் வர்த்தகப் பேராசையுடன், அரசியல் விளையாடல்களும் கலந்தே இருப்பது உண்மை. ஆட்சியில் இருப்பவருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்று காத்திருக்கும் ஊடக, அரசியல், சந்தை வணிக அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் சதியில் ஆட்சியில் இருப்பவருக்கு சங்கடங்கள் ஒருபுறம். மற்றொருபுறம் மக்களுக்கு தேவைகளுக்கு எதிரான போக்கிலே அவர்களை அல்லலில் ஆழ்த்துவது வேறு..

கள்ளச் சந்தை வணிகம் பற்றிய இவ்வரிகள், அவற்றில் ஈடுபட்டோர்க்கு சரியான சாட்டையடி.. ஆனால் கல்லுளி மங்கன்களுக்கு இதெல்லாம் என்ன ஒரு பொருட்டா?

செம்மையிம் இகந்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 14 : 14 – 15
பொருள்:
நேர்மையான வழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் வாழும்போதும் இறந்தபின்னும் அவர்க்குப் பகையாக விளங்கும் என்ற உண்மையை அறியாயோ நீ !. 
அத்தகைய கள்ளச் சந்தை கள்ளர்களுக்கு, உடன்போகுவோர்க்குமான பாடல்:

நேர்நின்று ஈட்டார் நிறைநின் றொழுகாராம்
சீர்கெட்டு யாப்பாரே செல்வத்தை - பார்மீது
யார்கேட்பார் என்றே! இறையுண்டு! சேர்த்துவைத்து
தீர்க்கும்நாள் கட்டையில்போம் நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...