அக்டோபர் 31, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -3

தமிழைத் தலைமேல் வைத்துத் தாங்கும் பகுத்தறிவுக் கூட்டத்தினர் தமிழகத்தில் ஏதோ அந்தணர்களால்தான் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன என்று பேசுகிறார்களே. சங்க இலக்கியங்களிலேயே நிமித்தம் பார்ப்பது போன்றவைப் பேசப்பட்டன.. கீழ்காணும் கலித்தொகை தரும் செய்தியைப் பாருங்கள்.. ஒன்று அவர்கள் பேசும் பழம் பெருமை நிராகரிக்கப்படவேண்டியது; அல்லது அவர்களது பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சார்ந்த அறிவு குறைபட்டது.

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 11 : 21 – 22

இவ்வரிகளின் பொருள்:
தோழி ! நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் – நமது புனைந்த நலத்தைக் கெடுப்பவர் அல்லர் - காரணம் என்னெனில் நம்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்தி கூறின – நல்ல அழகை உடைய மையுண் இடது கண்ணும் துடித்தது காண்.
தொல்காப்பியர் காலம் தொட்டே நிமித்தம் பார்த்தல் நிகழ்ந்து வருகிறது. பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன என்றால் அது நல்ல இடத்தில் ஒலிக்க வேண்டும். ( மேலும் காண்க : அகநா . 9. 151.) கண்ணும் துடித்தது
பெண்களுக்கு இடக் கண்ணும் ஆண்களுக்கு வலக் கண்ணும் துடித்தல் நன்னிமித்தம் ஆகும் ; மாறித் துடித்தால் தீ நிமித்தம் ஆகும்.
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்………………….
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன………... (சிலம்பு -5)
நிமித்தங்களில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இருப்பவர்களை ஏளனம் செய்பவர்களுக்காக ஒரு பாடல்:

பல்லியின் பாட்டிலும் கண்கள் துடித்தலிலும்
வல்ல நிமித்தங்கள் காணலாம் - இல்லையென்
பார்சற்று பார்த்து இலக்கியச் சான்றுகளை
தேர்ந்தபின் கூறட்டு மே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...