பிப்ரவரி 09, 2015

ஆனை முகனை அரவாபரணன் மகனை..


இராகம்: கௌளை           தாளம்: ஆதி (¾ தள்ளி)

பல்லவி:
ஆனைமுகனை அரவாபரணன் மகனை
ஆண்டருள் விநாயகனை அனுதினமவன் அருள்பெறநினை

அனுபல்லவி
வானைக் கடலையிவ் வையமுங் கடந்துநிறைந்
தோனை தேவர்களில் மூத்தோனை முழுமுதல்தேவனை

சரணம்:
பானைவயிறாயினும் பக்தர்க்குப் பரிந்தோடு
வானை மூவர்க்கும் மேலாம் கோனை முந்துதமிழ்
தேனை தெளிவை என்றும் தெவிட்டா அமுதாகு(ம்)
வானை வாக்கினில் வருவோனை வரகுஹன் அண்ணனை


2 கருத்துகள்:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...