டிசம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 100

मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी १००॥

மனீஷாம் மாஹேந்த்³ரீம் ககுபமிவ தே காமபி த³ாம்
ப்ரதத்தே காமாக்ஷ்யா் சரண தருணாதி³த்ய கிரண:
யதீ³யே ஸம்பர்கே த்ருʼத ரஸமரந்தா³ கவயதாம்
பரீபாகம் தத்தே பரிமலவதீ ஸூக்தி நலினீ 100

எந்த பாதக்கதிர்களின் தொடர்பால், கவிகளின் வாக்கென்னும் தாமரை, மகரந்தத்தேன் நிரம்பியும், நறுமணமுற்றும், மலர்ச்சியும் அடைகிறதோ, அத்தகைய காமாக்ஷியின் பாதமாகிற இளஞ்சூரிய ஒளிக்கதிர்கள் இந்திரனுடைய கிழக்கு திக்கை ஒளிர்விப்பதுபோல் என்னறிவை சிறந்ததொரு நிலையடையும்படி செய்கிறது!

ம்
அவள்பா தயிளம் அருணக் கதிர்கள் அமரரின்கோன்
உவந்த திசையை ஒளிர்செய்போல் என்ஞானம் ்ண்செயுதே!


சுகந்தம்-நறுமணம்;

டிசம்பர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 99

यशः सूते मातर्मधुरकवितां पक्ष्मलयते
श्रियं दत्ते चित्ते कमपि परिपाकं प्रथयते
सतां पाशग्रन्थिं शिथिलयति किं किं कुरुते
प्रपन्ने कामाक्ष्याः प्रणतिपरिपाटी चरणयोः ९९॥

: ஸூதே மாதர் மதுரகவிதாம் பக்ஷ்மலயதே
்ரியம் த³த்தே சித்தே கமபி பரிபாகம் ப்ரத²யதே
ஸதாம் பாக்³ரந்தி²ம் ிதி²லயதி கிம் கிம் ந குருதே
ப்ரபன்னே காமாக்ஷ்யா: ப்ரணதி பரிபாடீ சரணயோ: 99

தாயே! காமாக்ஷி! உன் திருவடிகளில் பணிவது, உன்னைச் சரணடைந்தோர்க்கு எதைத்தான் செய்யாது? நல்லோர்க்குப் புகழையும், இனிய கவிதா விலாசத்தை மேம்படுத்துகிறது. செல்வம் தருகிறது! உள்ளத்தில் ஒரு செவ்வியை (பக்குவம்) உருவாக்குகிறது. ஆசையென்னும் முடிச்சை அவிழ்கிறது.

நல்லோர்க் கொளியினை நல்கிடும்; இன்கவி ஞானமதை
நல்லுயர் வாக்கும்; நடைசெய்யும்; உள்ளம் நலம்படவும்
நல்கும்; விழைவென்னும் நாச முடிச்சவிழ் நற்பதங்கள்
நல்கா நலந்தானென் நற்றாயே காமாட்சீ நண்ணினார்க்கே!


ஒளி-புகழ்; இன்கவி-இனியகவிதை; நடை-செல்வம்; நலம்படல்-பண்படல்; விழைவு-ஆசை;; நண்ணி-கிட்டுதல்!

டிசம்பர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 98

शिवे स्मवित्पाशै: शशिशकलचूडप्रियतमे
शनैर्गत्यागत्या जितसुरवरेभे गिरिसुते
यतन्ते सन्तस्ते चरणनलिनालानयुगले
सदा बद्धं चित्तप्रमदकरियूथं दृढतरम् ९८॥

ிவே ஸம்வித்³ பாஶை: ஶஶி கலசூட³ப்ரிய தமே
னைர் க³த்யாக³த்யா ஜித ஸுர வரேபே கி³ரிஸுதே
யதந்தே ஸந்தஸ்தே சரண நலினாலான யுக³லே
ஸதா³³த்³ம் சித்த ப்ரமத³ கரி யூத²ம் த்³ருʼதரம் 98

மங்கள உருவே! சந்திரப் பிறைசூடியவர்க்கு மிகவும் இனியாளே! மலைமகளே! மென்னடையில் ஐராவதத்தையும் வெல்லுபவளே! உன் பாதத் தாமரைகளாம் கட்டுத்தறி இரண்டில் மனமாம் மதயானைகளை மிகவும் உறுதியாகப் ஞானக் கயிற்றால் கட்டுவதற்கு நல்லோர் என்றும் முயல்கிறார்கள்.

மங்கள மாய மலைமக ளேமதி வைத்தவருட்
தங்கியே! ஐராவ தத்தை நடையில் சயித்தவளே!
பங்கயப் பாதயீர் பற்றுக்கோ டில்மதப் பண்டிமனம்
தங்கஞா னப்பாரி தன்னால்நல் லோரொற்ற தாளுவரே!


பற்றுக்கோடு - கட்டுந்தறி; பண்டி-யானை; பாரி-கட்டுங்கயிறு; ஒற்ற-கட்டிட; தாளுதல்-முயற்சி செய்தல்;

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...