டிசம்பர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 99

यशः सूते मातर्मधुरकवितां पक्ष्मलयते
श्रियं दत्ते चित्ते कमपि परिपाकं प्रथयते
सतां पाशग्रन्थिं शिथिलयति किं किं कुरुते
प्रपन्ने कामाक्ष्याः प्रणतिपरिपाटी चरणयोः ९९॥

: ஸூதே மாதர் மதுரகவிதாம் பக்ஷ்மலயதே
்ரியம் த³த்தே சித்தே கமபி பரிபாகம் ப்ரத²யதே
ஸதாம் பாக்³ரந்தி²ம் ிதி²லயதி கிம் கிம் ந குருதே
ப்ரபன்னே காமாக்ஷ்யா: ப்ரணதி பரிபாடீ சரணயோ: 99

தாயே! காமாக்ஷி! உன் திருவடிகளில் பணிவது, உன்னைச் சரணடைந்தோர்க்கு எதைத்தான் செய்யாது? நல்லோர்க்குப் புகழையும், இனிய கவிதா விலாசத்தை மேம்படுத்துகிறது. செல்வம் தருகிறது! உள்ளத்தில் ஒரு செவ்வியை (பக்குவம்) உருவாக்குகிறது. ஆசையென்னும் முடிச்சை அவிழ்கிறது.

நல்லோர்க் கொளியினை நல்கிடும்; இன்கவி ஞானமதை
நல்லுயர் வாக்கும்; நடைசெய்யும்; உள்ளம் நலம்படவும்
நல்கும்; விழைவென்னும் நாச முடிச்சவிழ் நற்பதங்கள்
நல்கா நலந்தானென் நற்றாயே காமாட்சீ நண்ணினார்க்கே!


ஒளி-புகழ்; இன்கவி-இனியகவிதை; நடை-செல்வம்; நலம்படல்-பண்படல்; விழைவு-ஆசை;; நண்ணி-கிட்டுதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...