ஆகஸ்ட் 30, 2018

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு ஓர் அஞ்சலி

முன்பே முகநூலில் இட்ட அஞ்சலி கவிதை இது..!

பாரதத்தாய் பெற்றெடுத்த
  பார்போற்றும் வாஜ்பேயி
நீரதத்தின் நிலையுருவாய்
  நெஞ்சினிலே நிறைந்தவராம்
தீரமிக்க தலைவரென
  திரைகடற்கும் அப்பாலும்
ஆரங்கள் சூட்டுதற்கு
  அயலவரும் அயராத

பன்முகத்துத் திறமைமிக்கார்,
  பாவலர்நல் நாவலரும்!
தன்மையுடன் வெளியுறவும்
  தகைமையுடன் உள்ளுறவும்
கன்மமதே கண்ணெணவும்
  கண்ணியத்தின் காவலனாய்
அன்றுமென்றும் வாழ்ந்திருந்த
  அற்புதமாம் தலைவரவர்!

நற்கரத்தால் துவக்கியபொன்
  நாற்கரமாம் சாலைதிட்டம்!
செற்றலர்க்குச் சிம்மமென
  சீரியபோக் ரான்திட்டம்
சற்றும்நேர் மைகுன்றா
  சாகசமாய் கூட்டாட்சி
முற்றைந்து ஆண்டுகளில்
  முனைந்தமுதற் மூத்தமகன்!

இறப்பென்னும் இயற்கைக்கு
  யாரேதான் விலக்காவர்?
பிறப்பிறப்பின் நடுவினிலே
  பெற்றியுடன் வாழுவதே
சிறப்பான வாழ்வன்றோ?
  சீர்த்தமதி சிந்தனைகள்
திறந்தவொரு புத்தகமாய்
  திகழ்ந்தநல் வாழ்வென்று

இருந்திறப்போர் எத்தனைபேர்
  இவ்வுலகில் எண்குறைவே!
திரும்பிப்பார்த் திவ்வுலகே
  திருவென்னும் அடைமொழிக்கு
பொருத்தமிவர் என்றுரைத்துப்
  போற்றுமொரு சீர்தலைமை!
வருந்தாதீர் வாழுமவர்
  வான்புகழ்வை யத்தென்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...