ஜூலை 09, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -90

परामृतझरीप्लुता जयति नित्यमन्तश्चरी
भुवामपि बहिश्चरी परमसंविदेकात्मिका
महद्भिरपरोक्षिता सततमेव काञ्चीपुरे
ममान्वहमहंमतिर्मनसि कापि माहेश्वरी ९०॥

பராம்ருʼரீப்லுதா ஜயதி நித்யமந்தஶ்சரீ
புவாமபி ³ஹிஶ்சரீ பரமஸம்விதே³காத்மிகா
மஹத்³பிரபரோக்ஷிதா ஸததமேவ காஞ்சீபுரே
மமான்வஹ மஹம்மதிர்மனஸி காபி மாஹேஶ்வரீ 90

அமுதப் பெருக்கில் நனைபவளும், அனைத்துலகின் அகத்தில் இருப்பவளும் புறத்தே பரவியவளும், பேருணர்வாக ஒரே நிலையில் இருப்பவளும், காஞ்சியிலே, மகான்களால் தினமும் தரிசிக்கப்பட்டவளும், மகேசனிடத்திருந்து வேறிலாப் பொருளுமான ஒருவள் என்மனத்தே தினமும் விளங்குகிறாள்..

மதுத்தாரை மஞ்சன மாடும், புறத்திலும் மாநிலத்தோர்
இதயத்தும், ஆர்த்து இருக்கும், நிலைகொள் இருவுணர்வாய்
வதிந்திடும், என்றும் மகனீயர் காஞ்சியில் வந்துகாணும்,
பதியீசன் பங்குறைப் பாங்குளத் தென்றும் பதிந்ததுவே

மது-அமுதம்; தாரை-பெருக்கு; மஞ்சனமாட்டு-நீராட்டு; ஆர்த்து-நிறைந்து; இருவுணர்வு-பேருணர்வு; வதிந்திடு-தங்கிடு; மகனீயர்-மகான்கள்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மதுத் தாரை மஞ்சனமாடும், புறத்திலும், மாநிலத்தோர் இதயத்தும், ஆர்த்து இருக்கும், நிலைகொள் இருவுணர்வாய் வதிந்திடும், என்றும் மகனீயர் காஞ்சியில் வந்து காணும், பதியீசன் பங்குறைப் பாங்கு உளத்தென்றும் பதிந்ததுவே!

2 கருத்துகள்:

  1. அய்யா உங்கள் எண் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நான் அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் வசிக்கிறேன்.. என்னுடைய கைப்பேசி எண்: 408 722 1671

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...