ஜூன் 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -79

दन्तादन्तिप्रकटनकरी दन्तिभिर्मन्दयानैः
मन्दाराणां मदपरिणतिं मथ्नती मन्दहासैः
अङ्कूराभ्यां मनसिजतरोरङ्कितोराः कुचाभ्या-
मन्तःकाञ्चि स्फुरति जगतामादिमा कापि माता ७९॥

³ந்தா த³ந்தி ப்ரகடனகரீ ³ந்திபிர் மந்த³யானை:
மந்தா³ராணாம் மத³பரிணதிம் மத்²னதீ மந்த³ஹாஸை:
அங்கூராப்யாம் மனஸிஜதரோரங்கிதோரா: குசாப்யா-
மந்த:காஞ்சி ஸ்பு²ரதி ஜக³தா மாதி³மா காபி மாதா 79

தனது மென்னடையினால், தந்த்தத்திற்கு தந்தம் என்று யானைகளோடு போர் புரிந்தவளும், தனது மென்னகையினால் மந்தாரங்களின் கருவத்தைக் குலைப்பவளும், மன்மத விருட்சத்தின் முளைபோன்றதாம் தனங்களால் சோபிப்பவளுமான, ஆதி மாதாவுமான ஒருத்தி, காஞ்சி நகரில் விளங்குகிறாள்.

மென்னடை யில்தந்த வேழங்கட் கீடாய் மிருதமிடும்;
மென்னகை, மந்தாரம் மீதேகும் தற்கினை வேரறுக்கும்;
மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும்,
அன்னையள் ஆதி அமைந்தனள் காஞ்சியில் ஆண்டிருந்தே!

மிருதம்-போர்; தற்கு-செருக்கு; மூலம்-மரம்; மதுரம்-முளை; வாமம்-சோபை,ஒளி.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மென்னடை யில்தந்த வேழங்கட் கீடாய் மிருதமிடும்; மென்னகை, மந்தாரம் மீதேகும் தற்கினை வேரறுக்கும்; மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும், அன்னையள் ஆதி அமைந்தனள் காஞ்சியில் ஆண்டிருந்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...