ஜூன் 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -78

एका माता सकलजगतामीयुषी ध्यानमुद्राम्
एकाम्राधीश्वरचरणयोरेकतानां समिन्धे
ताटङ्कोद्यन्मणिगणरुचा ताम्रकर्णप्रदेशा
तारुण्यश्रीस्तबकिततनुस्तापसी कापि बाला ७८॥

ஏகா மாதா ஸகல ஜக³தாமீயுஷீ த்யான முத்³ராம்
ஏகாம்ராதீஶ்வர சரணயோ ரேகதாநாம் ஸமிந்தே
தாடங்கோத்³யன் மணிக³ணருசா தாம்ரகர்ணப்ரதே³ஶா
தாருண்யஶ்ரீ ஸ்தப³கித தனுஸ் தாபஸீ காபி பா³லா 78

குழைகளின் இரத்தினங்களிலிருந்து உதிக்கும் காந்தியால் செந்நிறமான காதுகளை உடையவளும், இளமைப் பொலிவால் பூங்கொத்தன்ன திருமேனியை உடையவளும், அனைத்துலகத்திற்கும் ஒரே தாயானவளும், ஏகாம்பர நாதர் திருவடிகளில் நிலைபெற்ற தியான முத்திரையை அடைந்தவளுமாயுள்ள இளந் தவப்பெண்ணாக ஒருவள் ஒளிர்கிறாள்.

குழைமணி தோன்றும் குருவில்சி வந்த குழையுடையாள்;
மழப்பொலி வாலே மலர்த்திரள் போலுடல் வாய்த்தவளாம்;
பொழிலெலாம் போற்றிப் புகலன்னை, ஏகம்பன் பொன்னடிகள்
புழங்குசிந் தைக்கை புனைந்திள ஐயையாம் பொம்மலன்றே!

குழை-தாடங்கம்,காது; குரு-ஒளி,காந்தி;  மழ-இளமை; மலர்த்திரள்-பூங்கொத்து; பொழில்-உலகு; புழங்கு-இலங்கும்; சிந்தை-தியானம்;கை-முத்திரை; ஐயை-தவப்பெண்; பொம்மல்-பொலிவு,ஒளிர்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


குழை மணி தோன்றும் குருவில் சிவந்த குழையுடையாள்; மழப் பொலிவாலே மலர்த்திரள்போல் உடல் வாய்த்தவளாம்; பொழிலெலாம் போற்றிப் புகல் அன்னை, ஏகம்பன் பொன்னடிகள் புழங்கு சிந்தைக்கை புனைந்திள ஐயையாம் பொம்மல் அன்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...