ஜூன் 03, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -56

परा विद्या हृद्याश्रितमदनविद्या मरकत-
प्रभानीला लीलापरवशितशूलायुधमनाः
तमःपूरं दूरं चरणनतपौरन्दरपुरी-
मृगाक्षी कामाक्षी कमलतरलाक्षी नयतु मे ५६॥

பரா வித்³யா ஹ்ருʼத்³யாஶ்ரித மத³னவித்³யா மரகத-
ப்ரபா நீலா லீலா பரவஶித ஶூலாயுதமனா:
தம: பூரம் தூ³ரம் சரணனத பௌரந்த³ர புரீ-
ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ கமல தரலாக்ஷீ நயது மே 56

உயர் ஸ்ரீவித்யையும், இதயதுக்கின்பமளிப்பவளும், மன்மதக்கலை கொண்டவளும், மரகதம்போல் கருத்த நிலையிலிருப்பவளும், தன்வயமாக்கப்பட்ட சூலபாணியின் மனத்தை உடையவளும், புரந்தரனுலகப் பெண்கள் தன் திருவடிகளில் வணங்கப் பெற்றவளும், தாமரைப்போல் அழகு கண்களுள்ளவளும், காமாக்ஷி என்னுடைய பாபக்குவியலைத் துரத்தட்டும்!

உயர்திரு வித்தையள், உள்ளத்துக் கீவள் உவக்கயின்பம்;
வயக்கும் மரகத மாமையள், மாரன வன்கலையாள்;
வயமாக சூலன் மனத்தினள், வான்பெண்டிர் வாழ்த்தடியள்
கயக்கண்ணள் காமாட்சி கன்மபா வங்கள் கடிந்தருளே

திருவித்தை-ஸ்ரீவித்யா; வயக்கும்-ஒளிரும்; மாமை-கருமை; வயம்-வசம்; வான்பெண்டிர்-புரந்தரனுலகப் பெண்டிர்; கயம்-தாமரை; கடிந்து-விலக்கி

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

உயர் திருவித்தையள், உள்ளத்துக்கு ஈவள் உவக்க இன்பம்; வயக்கும் மரகத மாமையள், மாரனவன் கலையாள்; வயமாக சூலன் மனத்தினள், வான்பெண்டிர் வாழ்த்தடியள்; கயக்கண்ணள் காமாட்சி கன்ம பாவங்கள் கடிந்தருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...