ஜூன் 01, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 54

घनश्यामान्कामान्तकमहिषि कामाक्षि मधुरान्
दृशां पातानेतानमृतजलशीताननुपमान्
भवोत्पाते भीते मयि वितर नाथे दृढभव-
न्मनश्शोके मूके हिमगिरिपताके करुणया ५४॥

னஶ்யாமான் காமாந்தக மஹிஷி காமாக்ஷி மதுரான்
த்³ருʼஶாம் பாதானேதானம்ருʼத ஜலஶீதானனுபமான்
வோத் பாதே பீதே மயி விதர நாதே² த்³ருʼந்-
மனஶ்ஶோகே மூகே ஹிமகி³ரிபதாகே கருணயா 54

காமனை அழித்தவரின் மனையாளே! இமயமலையின் கொடியே! காமாக்ஷி! உலகிற்கதிபதியே! மேகம்போல் கருத்து அழகாயும், இனியவையும்,  அமுத நீர்போல் குளிர்ந்தவையும், இணையற்றவையாகவும் உள்ள உன் கடைக்கண் வீச்சை, இகவாழ்வாம் பெரும் இன்னலில் பயந்து, பெரும் மனத் துயரமுள்ளவனும், ஊமையுமாயிருக்கிற என்னிடம் கருணையால் வீசுவாயாக!

மலையோர்க் கொடியும், மதனழித் தார்க்கு மனைவியுமாம்
உலகாளும் காமாட்சி! ஊரிகார் காந்தியும் உப்பதும்தண்
சலவமு தம்போலும் தன்னிக ரில்லாநின் தண்கடைக்கண்,
உலையிகத் துன்பம் உறுவூமை யென்னை உவந்தருளே!

ஊரி-மேகம்; கார்-கருமை; உப்பு-இனிமை; சலவமுத-நீரமுதம்; உலை-துயர்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மலையோர்க் கொடியும், மதனழித்தார்க்கு மனைவியுமாம், உலகாளும் காமாட்சி! ஊரி கார் காந்தியும் உப்பதும் தண் சல அமுதம்போலும் தன்னிகரில்லா நின் தண் கடைக்கண், உலை இகத் துன்பம் உறு ஊமையென்னை உவந்தருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...