மே 03, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 24

कमलसु षमाक्ष्यारोहे विचक्षणवीक्षणाः
कुमुदसुकृतक्रीडाचूडालकुन्तलबन्धुराः
रुचिररुचिभिस्तापिच्छश्रीप्रपञ्चनचुञ्चवः
पुरविजयिनः कम्पातीरे स्फुरन्ति मनोरथाः २४॥

கமல ஸுஷமா கக்ஷ்யாரோஹே விசக்ஷண வீக்ஷணா:
குமுத³ ஸுக்ருʼத க்ரீடா³ சூடா³ல குந்தல ப³ந்துரா:
ருசிரருசிபிஸ் தாபிச்ச²  ஸ்ரீப்ரபஞ்சன சுஞ்சவ:
புரவிஜயின: கம்பாதீரே ஸ்பு²ரந்தி மனோரதா:² 24

தாமரைப் பூவின் அழகுக்கு ஒப்பாகும் திறனுள்ள கடைக்கண்-களுடைத்தவளும், குமுத நேசனாம் சந்திரனைச் முடிமணியாக தரித்த கேசங்களால் மனதிற்கு இனிமையாயிருப்பவளும், அழகு மேனியொளியால் காயாம்பூவின் அழகை வெளிப்படுத்துபவளுமாம் தேவி திரிபுரங்களை வென்ற சிவனின் மனத்தின் ஆசைகளாக கம்பை நதிக்கரையில் வீற்றிருக்கிறாளே!

அரவிந்த அஞ்சுபோல் ஆற்றல் அமைகடை அட்சயீரள்
குரங்கன் குமுதற் குளத்தனை கோன்முடிக் கொள்ளினியள்
தரமமை சாயலில் தாம்காசச் சாய்காட்டும் தாயவள்முப்
புரம்வெல் புனிதர் பொறிமால், புனற்கம்பை போந்தவளே!

அரவிந்தம்-தாமரை; அஞ்சு-அழகு; ஆற்றல்-திறன்; கடை அட்சம் - கடைக்கண்; ஈர்-இரண்டு; குரங்கன்-சந்திரன்; கோன்முடி-மணிமுடி; தரம்-அழகு; சாயல்-மேனி; காசம்-காயாம்பூ; சாய்-அழகு; பொறி-மனம்; மால்-ஆசை

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அரவிந்த அஞ்சுபோல் ஆற்றல் அமை, கடைஅட்ச ஈரள், குரங்கன் குமுதற்கு உளத்தனை, கோன்முடிக் கொள் இனியள், தரமமை சாயலில் தாம், காசச்சாய் காட்டும் தாயவள், முப்புரம்வெல் புனிதர் பொறி மால், புனற் கம்பை போந்தவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...