மே 02, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 23

मधुरवचसो मन्दस्मेरा मतङ्गजगामिनः
तरुणिमजुषस्तापिच्छाभास्तमःपरिपन्थिनः
कुचभरनताः कुर्युर्भद्रं कुरङ्गविलोचनाः
कलितकरुणाः काञ्चीभाजः कपालिमहोत्सवाः २३॥

மதுரவசநா: மந்த³ஸ்மேரா மதங்க³ஜ கா³மின:
தருணிம ஜுஷஸ் தாபிச்சா²பாஸ் தம: பரிபந்தி²:
குசபரனதா: குர்யுர் பத்³ரம் குரங்க³விலோசனா:
கலித கருணா: காஞ்சீபா: கபாலி மஹோத்ஸவா: 23

இன்சொல், மென்னகை, யானை போல் மதர்த்த நடை, இளமை உடைத்தவள், காயாம்பூ ஒளியினள், அஞ்ஞானம் நீக்குபவள், தனபாரத்தால் வணங்கியவையும், மான்போல் கண்கள் கொண்டவளும், கருணை வடிவினள், காஞ்சியிலுள்ளவள் காபாலிக்கு மகிழ்ச்சியைத் தருபவள். நமக்கவள் மங்களத்தை நல்கட்டும்.

இன்சொல், முறுவல், இபநடைக் கீடு, இளமையினள்;
மின்னும் மலர்காய மேனியள்; நீக்குவாள் மிச்சையினை;
அன்பினள், முன்சாய்க்கும் அங்கலி யள்மறி அட்சமுடை
அன்னைகாஞ் சீயள், அரக்கார்ப்பு; சேமம் அருளுவளே!

இபநடை-யானைநடை; ஈடு-பெருமை; மலர்காயம்-காயமலர்; மிச்சை-அறியாமை; அங்கலி-தனம்; மறி-மான்; ஆர்ப்பு-மகிழ்ச்சி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


இன்சொல், முறுவல், இபநடைக்கு ஈடு, இளமையினள்; மின்னும் மலர்காய மேனியள்; நீக்குவாள் மிச்சையினை; அன்பினள், முன்சாய்க்கும் அங்கலியள் மறி அட்சமுடை, அன்னை காஞ்சீயள், அரக்கார்ப்பு; சேமம் அருளுவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...