ஏப்ரல் 02, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 93

मन्दारादिषु मन्मथारिमहिषि प्राकाश्यरीतिं निजां
कादाचित्कतया विशङ्क्य बहुशो वैशद्यमुद्रागुणः
श्रीकामाक्षि! तदिय सङ्गम कला मन्दीभवत् कौतुकग:
सातत्येन तव स्मिते वितनुते स्वैरासनावासनाम् ९३॥

மந்தா³ராதி³ஷு மன்மதா²ரி மஹிஷி! ப்ராகாஶ்யரீதிம் நிஜாம்
காதா³சித்கதயா விஶங்க்ய ³ஹுஶோ வைஶத்³ய முத்³ராகு³:
ஸ்ரீ காமாக்ஷி! ததீய ஸங்கம கலா மந்தீபவத் கௌதுக:
ஸாதத்யேன தவ ஸ்மிதே விதனுதே ஸ்வைராஸனாவாஸநாம் 93

மன்மதவைரியின் மனையாளே காமாக்ஷி!  மந்தாரம் முதலிய மலர்களிலே தன்சிறப்பு சில நேரங்களில்தான் வெளிப்படுகிறதென்று நினைத்து, தூய வெண்ணிறப் பண்பானது, அவற்றுடன் சேர்வதில் ஆர்வம் குன்றியதாக ஆகி, உனது புன்சிரிப்பில் இடையறாது தன் விருப்பப்படியே தங்குவதைச் செய்கிறது.

மந்தாரம் போலாம் மலரால் தனதுகூர் மைதெரிதல்
சிந்நேர மேயென்று சிந்தித்து தூவவை சேருதற்கு
சிந்தனை யார்வமும் சிங்கியுன் மென்னகைச் சேப்பிடுமாம்
கந்தர்ப்ப வைரி கவர்மனை காமாட்சி! கண்டுவந்தே

கூர்மை-சிறப்பு; தூ-வெண்மை; சிங்கி-குன்றி; சேப்புதல்-தங்குதல்; கந்தர்ப்பவைரி-மன்மதன்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

மந்தாரம் போலாம் மலரால் தனது கூர்மை தெரிதல் சிந்நேரமேயென்று சிந்தித்து தூவவை சேருதற்கு சிந்தனையார்வமும் சிங்கி உன் மென்னகைச் சேப்பிடுமாம்

கந்தர்ப்ப வைரி கவர் மனை காமாட்சி! கண்டு உவந்தே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...