பிப்ரவரி 23, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 55

उत्तुङ्गस्तनमण्डलीपरिचलन्माणिक्यहारच्छटा-
चञ्चच्छोणिमपुञ्जमध्यसरणिं मातः परिष्कुर्वती
या वैदग्ध्यमुपैति शंकरजटाकान्तारवाटीपतत्
स्व​र्वापीपयसः स्मितद्युतिरसौ कामाक्षि ते मञ्जुला ५५॥

உத்துங்க³ ஸ்தன மண்ட³லீ பரிசலன் மாணிக்ய ஹார ச்ச²டா-
சஞ்சச் சோ²ணிம புஞ்ஜ மத்ய ஸரணிம் மாத: பரிஷ்குர்வதீ
யா வைத³க்³த்ய முபைதி ஶம்கர ஜடா காந்தார வாடீபதத்
ஸ்வர்வாபீ பயஸ: ஸ்மித த்³யுதிரஸௌ காமாக்ஷி! தே மஞ்ஜுலா 55

அன்னையே! காமாக்ஷி! உயர்ந்திருக்கும் தனமிரண்டில் அசைந்தாடும் மாணிக்க மாலையில் கொத்தாய்த் திகழும் செம்மை நிறக்குவியலின் இடைவெளிகளை நிரப்பிட, எந்தவுன் மென்னகை, சிவனது சடைக்காட்டினூடே பாயும் கங்கை நீரின் ஆற்றலை அடைகிறதோ, அதன் ஒளி அழகானதாகும்

உயர்ந்த தனக்கூட்டில் ஒல்குமாம் மாணிக்க ஒண்ணணியில்
வயக்கிடும் கொத்தாய்செம் மைக்குப்பல் வெற்றிட மத்தியினில்
மயக்குமெம் மென்னகை, மாதாகா மாட்சீசி வன்சடைக்கான்
நயக்கும்கங் கைநீர்வல் நன்குறு மோவவ்வெல் நல்லழகே!

ஒல்கு-ஆடும்; ஒண்ணனி-ஒளிர் மாலை; வயக்கிடும்; ஒளிரும்; குப்பல்-குவியல்; கான்-காடு; நயக்கும்-விரும்பும்; வல்-ஆற்றல்; அவ்வெல்-அவ்வொளி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


உயர்ந்த தனக்கூட்டில் ஒல்குமாம் மாணிக்க ஒண்ணணியில் வயக்கிடும் கொத்தாய் செம்மைக் குப்பல் வெற்றிட மத்தியினில் மயக்கும் எம் மென்னகை, மாதா காமாட்சீ, சிவன் சடைக் கான் நயக்கும் கங்கை நீர் வல் நன்குறுமோ அவ் எல் நல்லழகே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...