டிசம்பர் 01, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 73

कवित्वश्रीमिश्रीकरणनिपुणौ रक्षणचणौ
विपन्नानां श्रीमन्नलिनमसृणौ शोणकिरणौ
मुनीन्द्राणामन्तःकरणशरणौ मन्दसरणौ
मनोज्ञौ कामाक्ष्या दुरितहरणौ नौमि चरणौ ७३॥

கவித்வ ஸ்ரீமிஶ்ரீ கரண நிபுணௌ ரக்ஷண சணௌ
விபன்னாநாம் ஸ்ரீமன் நலின மஸ்ருணௌ ஶோண கிரணௌ
முனீந்த்³ராணாமந்த: கரண ரணௌ மந்த³ ஸரணௌ
மனோஜ்ஞௌ காமாக்ஷ்யா து³ரித ஹரணௌ நௌமி சரணௌ 73

கவிதை இலக்குமியை பெருக்கவல்லதும்; மெலிவுற்றோரைக் காக்கும் திறனுள்ளதும், அழகிய தாமரைபோல் மென்மையுடையவையும், சிவந்த கதிர்களை உடையதும், முனிவர்தம் இதயங்களில் வசிப்பவையும், மென்னடை உடையவையும்,பாவங்களை நீக்குவதுமான காமாட்சியின் பாதங்களை வணங்குகிறேன்.

கவிதைக் கமலையோங் கச்செய்யும், ஆசுற்றார் காப்பதுவும்,
கவினார் கமலக் கயம்கொள் வதும்,செங் கதிருடைத்த,
தவத்தோர் மனங்களில் தங்கிடும், மென்னடை தானுடைத்த
பவம்நீக்கும் காமாட்சி பாதங்கள் சேவித்துப் பற்றினேனே!


கமலை-இலக்குமி; ஆசு-துன்பம்; கவினார்-அழகு மிகுந்த; கயம்-மென்மை; சரித்தல்; பவம்-பாவம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...