நவம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 70

निरस्ता शोणिम्ना चरणकिरणानां तव शिवे
समिन्धाना सन्ध्यारुचिरचलराजन्यतनये
असामर्थ्यादेनं परिभवितुमेतत्समरुचां
सरोजानां जाने मुकुलयति शोभां प्रतिदिनम् ७०॥

நிரஸ்தா ோணிம்னா சரணகிரணாநாம் தவ ிவே
ஸமிந்தானா ஸந்த்யா ருசிரசல ராஜன்ய தனயே
அஸாமர்த்²யாதே³னம் பரிபவிதுமேதத் ஸமருசாம்
ஸரோஜாநாம் ஜானே முகுலயதி ோபாம் ப்ரதிதி³னம் 70

மங்களமானவளே! மலையரசன் மகளே! உன் பாதங்களின் செவ்வொளியால் தோல்வியுற்று, அவமானமடைந்து வெகுண்டு எழுந்த மாலை நேரச் செம்மை, அவ்வாறு செய்ய திறனில்லாமல், அதற்கு ஒப்பான தாமரை மலர்களின் ஒளியை கூம்பிக்கொள்ளச் செய்கிறதென்று எண்ணுகிறேன்.

வரையரை யன்பெண்ணே! மங்கள மே!நின் மலரடியீர்
நிரைசிவப் பில்தோல்வி நேர்ந்து வெகுண்டெழு நேமமதன்
இராகம் திறமது இன்றி இணையாம் எரிமலரின்
விராசம் ஒடுக்க விழைவதாய் எண்ணும் விளையுளன்றே!


வரையரையன் -இமவான்; நிரை-முழுதும் விரவிய;  நேமம்-மாலைநேரம்; இராக-செம்மை வண்ணம்; இணையாம்- ஒப்பான; எரிமலர்- செந்தாமரை; விராசம்-ஒளி; ஒடுங்க-கூம்ப; விளையுள்-மனம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...