நவம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 69

करीन्द्राय द्रुह्यत्यलसगतिलीलासु विमलैः
पयोजैर्मात्सर्यं प्रकटयति कामं कलयते
पदाम्भोजद्वन्द्वं तव तदपि कामाक्षि हृदयं
मुनीनां शान्तानां कथमनिशमस्मै स्पृहयते ६९॥

கரீந்த்³ராய த்³ருஹ்யத்யலஸ க³தி லீலாஸு விமலை:
பயோஜைர் மாத்ஸர்யம் ப்ரகடயதி காமம் கலயதே
பதா³ம்போஜ த்³வந்த்³வம் தவ தத³பி காமாக்ஷி ஹ்ருʼ³யம்
முனீநாம் ாந்தாநாம் கத²மனிமஸ்மை ஸ்ப்ருʼஹயதே 69

காமாக்ஷி! உன்னுடைய தாமரைப் பதங்களிரண்டும், மென்னடை லீலையில் சிறந்த யானையையும் வஞ்சிக்கிறது.மாசற்ற தாமரையிடத்தே பொறாமை கொள்ளுகிறது. ஆசையைத் தருகின்றன. ஆயின் வஞ்சிப்பதும், பொறாமையும், ஆசையும் இல்லாத அமைதியான முனிவர்களின் இதயம் இவற்றில் ஈடுபாடு கொள்கிறதே!

விஞ்சியே மென்னடை வித்தையில் மேலாம் வியன்கரியை
வஞ்சிக்கும்; ஆசற்ற வாரிசத் தின்மேல் மறலியுறும்
நெஞ்சில் தருமாசை நின்மரைத் தாளீரில் நின்றமைதி
கொஞ்சுத வத்தோர்க் குளமொன்றி, காமாட்சீ கூடிடுதே!


மறலி-பொறாமை; வியன்-சிறப்பு; வஞ்சிக்கும்-துரோகம் செய்யும்; ஆசற்ற-மாசற்ற, குற்றமில்லாத; வாரிசம்-தாமரை; மரை-தாமரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...