நவம்பர் 03, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 45

अविश्रान्तं पङ्कं यदपि कलयन्यावकमयं
निरस्यन्कामाक्षि प्रणमनजुषां पङ्कमखिलम्
तुलाकोटिद्वन्दं दधदपि गच्छन्नतुलतां
गिरां मार्गं पादो गिरिवरसुते लङ्घयति ते ४५॥

அவி்ராந்தம் பங்கம் யத³பி கலயன் யாவகமயம்
நிரஸ்யன் காமாக்ஷி ப்ரணமனஜுஷாம் பங்கமகி²லம்
துலாகோடி த்³வந்த³ம் த³³பி ச க³ச்ச²ன்னதுலதாம்
கி³ராம் மார்க³ம் பாதோ³ கி³ரிவரஸுதே லங்கயதி தே 45

மலையரசன் மகளே, காமாக்ஷீ! உன்றன் திருவடிகள் ஓய்வின்றி செம்பஞ்சுக் குழம்பாகிய சேற்றை அணிந்தபோதிலும், வணங்குவோரின் எல்லா பாவச் சேற்றையும் நீக்குகிறது. துலாக்கோடி என்னுமிரு பாதவணிகளைத் (தண்டைகள்) தரித்திருந்தும், துலைவுக்கு அப்பாற்பட்டு (ஒப்பற்று) விளங்கிறது. அவை என் சொற்களின் வழியையும் கடந்து நிற்கின்றன.

செம்பஞ்சுச் சேற்றைநின் சீர்பா தயீரோயா தேயணிந்தும்
கும்பிடு வோர்க்குக் கொடும்பாவச் சேறெனும் கோதகற்றும்;
தம்பாதத் தண்டையுந் தாம்தனக் கேயொப்பில் தன்மையதாம்;
எம்சொற் கடந்தும் எழுமாம்கா மாட்சீ! இமமகளே!


சீர்பாத ஈர் ஓயாதே - சிறப்பு மிக்க பாதமிரண்டும் ஒய்வின்றி; கோது - நெறிதவறுகை; துலாக்கோடி; பாததணியும் அணி, சிலம்பு, தண்டை; இமமகள்-இமவான் மகள்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...