அக்டோபர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 40

शनैस्तीर्त्वा मोहाम्बुधिमथ समारोढुमनसः
क्रमात्कैवल्याख्यां सुकृतिसुलभां सौधवलभीम्
लभन्ते निःश्रेणीमिव झटिति कामाक्षि चरणं
पुरश्चर्याभिस्ते पुरमथनसीमन्तिनि जनाः ४०॥

னைஸ்தீர்த்வா மோஹாம்பு³திமத² ஸமாரோடுமனஸ:
க்ரமாத்கைவல்யாக்²யாம் ஸுக்ருதிஸுலபாம் ஸௌதவலபீம்
லபந்தே நி:்ரேணீமிவ சடிதி காமாக்ஷி சரணம்
புர்சர்யாபிஸ்தே புரமத²னஸீமந்தினி ஜனா: 40

திரிபுரமெரித்தோன் தேவி! காமாக்ஷீ! பையப் பைய இச்சைக்கடலைத் தாண்டி, பின்னர், புண்ணியம் செய்தவர்களால் எளிதில் பெறக்கூடிய முத்தியெனும் மேன்மாடத்தை முறையோடு ஏற விரும்பும் மக்கள், ஏணிபோன்றதாம் உன் திருவடியை பலவிதமாய் வழிபட்டு விரைவில் அடைகிறார்கள்

திரிபுரம் தீய்த்தார்தம் தேவியே! காமாட் சிமெல்லமெல்ல
கருதற் கடலைத் கடந்துநற் புண்ணியர் கைகொளுமாம்
திரமெனும் மேன்மாடம் செல்லாற்றைக் ஆர்வும், செகத்தவருன்
திருப்பாத ஏணி திறம்ப லதுதித்துச் சேர்விரைந்தே!

தீய்த்தார் - எரித்தார்; கருதல்-விழைவு,இச்சை; திரம்-முத்தி; செல்லாறு- செல்லும் வழி; ஆர்வு-விழைதல்; திறம்பல-பல வழிகளில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...