ஆகஸ்ட் 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 79

कालाञ्जनप्रतिभटं कमनीयकान्त्या
कन्दर्पतन्त्रकलया कलितानुभावम्
काञ्चीविहाररसिके कलुषार्तिचोरं
कल्लोलयस्व मयि ते करुणाकटाक्षम् 79

காலாஞ்ஜன ப்ரதிபடம் கமனீய காந்த்யா
கந்தர்ப தந்த்ரகலயா கலிதானுபாவம் |
காஞ்சீ விஹார ரஸிகே கலுஷார்தி சோரம்
கல்லோலயஸ்வ மயி தே கருணாகடாக்ஷம் ||79||

காஞ்சீயில் விளையாட விரும்புபவளே! தன்னுடைய ஒளியால் கருமையான கண்மைக்கு ஒப்பாயதும், காமனுடைய கலையின் சாத்திர அறிவினால் உண்டாகும் உணர்ச்சி வெளிப்பாடு கொண்டதும், பாவங்களால் தோன்றும் துன்பங்களை போக்குவதுமான உன் கருணை மிக்கக் கடைக்கண் பார்வை ஒளி என்மீது அலைபோல் பாயச் செய்வாயாக!

கருமைக்கண் மைக்குத்தன் காந்தியில் ஒப்பதும் காமனவன்
அருங்கலை வேத அறிவின் உணர்ச்சி அடங்கியதும்
கருவினை சேர்க்கும் கலிநீக்கும் நின்கடைக் கண்ணதனால்
கருணை யொளியைக் கனிகாஞ் சியிலே களிப்பவளே


காந்தி-ஒளி; கருவினை-தீவினை; கலி-துன்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...