மே 31, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 91

स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला
कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला 91

ஸ்மர-மதன-வரண-லோலா மந்மத ஹேலா-விலாஸ-மணிசாலா |
கனகருசி சௌர்யசீலா த்வமம்ப பாலா கராப்ஜ-த்ருதமாலா ||91||

மன்மதனை மாய்த்தவரை தன் பதியாகக் கொள்வதில் நாட்டமுள்ளவளும், மன்மதனுடைய காதல் லீலைகளால் உண்டாகும் மகிழ்வுக்கு இரத்தின மாளிகையானவளும், தங்கத்தின் ஒளியை பறித்து கொள்ளும் திறம்கொண்டவளும், தாமரைப் போன்ற கைகளில் பதியை வரிக்க மணமாலையைக் கொண்டவளுமான பாலா நீயாவாய்.

மன்மதனை மாய்த்தாரை மன்னராய் கொள்ளும் மனமுற்றாளே
மன்மத லீலையின் மத்திர  மாம்காழி மாளிகையே;
பொன்னொளி கட்டிடப் போதும் திறத்தாளே; பொற்கமல
மன்ன கரத்தினில் மாலைகொள் பாலாவாம் மாதாநீயே


மத்திரம் - மகிழ்வு; காழி - இரத்தினம்;  போதும் - தேவைக்கீடான; கட்டு - பறித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...