மே 01, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 61

तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया
स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया 61

துஷ்யாமி ஹர்ஷிதஸ்மர சாஸனயா காஞ்சிபுர க்ருதாஸனயா |
ஸ்வாஸனயா ஸகல ஜகத்பாஸனயா கலிதசம்பராஸனயா ||61||


மன்மதனைத் தண்டித்தவரான பரமசிவனை மகிழ்வுறச் செய்தவளும், காஞ்சீபுரியில் இருப்பிடத்தைக் கொண்டவளும், தன்னில் தானே நிலைத்தவளும், எல்லா உலகங்களையும் (மாயையால்) புலப்படுமாறு ஒளி செய்தவளும், சம்பர வைரியை (மன்மதனை) மீண்டும் பிறக்கும்படி செய்தவளாளுமானவளால் நான் மகிழ்வடைகிறேன்

மன்மத வைரி மகிழ்வுறச் செய்திடு மாண்புடையாள்
தன்னில் நிலைபெறு தன்மையள் காஞ்சி தலமுறைவாள்
தன்னரு ளாலவள் சம்பர வைரியை தானுயிர்ப்பாள்
இன்னு லகிலெல்லே ஈவாளால் என்னுளம் இன்புறுதே

எல் - ஒளி; சம்பர வைரி - மன்மதன்; மன்மத வைரி - சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...