ஏப்ரல் 02, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 32

कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः
कूलङ्कषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भम् 32

குருவிந்த கோத்ர காத்ரம் கூலசரம் கமபி நௌமி கம்பாயா: |
கூலங்கஷ குசகும்பர் குஸுமாயுத வீர்ய ஸார ஸம்ரம்பம் ||   (32)

சிவந்த ரத்தினத்தின் நிறத்த மேனியுடைத்ததும்கம்பை நதிக்கரையில் உலவுவதும்கச்சங்களாகிய கரைகள்வரை பரந்த மார்பகங்கள் கொண்டதும்காமனுடைய முழுவீச்சின் வேகத்தோடு கூடியதுமானவருணனைக்கு அப்பாற்பட்ட மூர்த்தியை வணங்குகிறேன்.

செம்மணி யின்வண்ணச் செந்நிற மேனி சிறந்ததுவை
கம்பை நதியின் கரையு லவுவதை, கச்சையதன்
சிம்மு வரையான சீர்தனங் கள்கொண்ட சித்தசனின்
செம்மையை,சொல்லெட்டா தெய்வத்தை சேவிப்பேன் தெண்டனிட்டே


சிம்மு - எல்லை, கரை; சித்தசன் - காமன்; சொல்லெட்டா - விவரிக்கவொண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...