ஏப்ரல் 01, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 31

वीक्षेमहि काञ्चिपुरे विपुलस्तनकलशगरिमपरवशितम्
विद्रुमसहचरदेहं विभ्रमसमवायसारसन्नाहम् 31

வீக்ஷேமஹி காஞ்சிபுரே விபுல ஸ்தனகலச கரிம் பரவசிதம் |
வித்ரும ஸஹசர தேஹம் விப்ரம ஸமவாய ஸார ஸன்னாஹம் ||   (31)


பருத்த மார்ப்பகத்தின் கனத்தினால்மிகவும் குனிந்ததும்பவழம் போன்ற மேனி நிறங்கொண்டது கூடல் விளையாடல்களின் பருப்பொருளானதும்இளமையின் துடிப்புடன் இருக்கக் கூடியதுமான ஒரு உருவத்தை காஞ்சீபுரியில் பார்க்கிறோம்.

பருத்த தனங்களின் பாரத்தால் தாழுடற் பாங்குடைத்தும்
அருஞ்செம் பவழம்போல் அற்புத வண்ண அழகுடைத்தும்
விரும்பியே கூடல் விளையாட்டை ஆட விழைவதொன்றைக்
கருத்தில் கருதியே காஞ்சியில் கண்களால் காண்கிறோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...