ஜனவரி 28, 2016

ஆலமும் அரசும்... - மடக்கு வெண்பா!

மடக்குக் கவிதைகள் எழுதுவது ஒரு சுவையான அனுபவம். இதோ வேடிக்கையாக ஒரு கவிதை..

ஆலமும் அரசும்!

ஆலம் அருந்தி அகிலம் புரந்தாரே
ஆலம் அடியமர் ஆதியவன் - நீலம்
அரசன் கழுத்தில் அடக்கினாள் சூலி!
அரசல் புரசலாய் பேச்சு!

பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விடத்தை அருந்தியதால், தேவர்களையும், அசுரர்களையும் மட்டுமா, சிவன் காத்தார்? உலகையே அல்லவா? அவரே கல்லாலின் கீழமர்ந்து நால்வர்க்கு வாக்கிறந்த பூரணமாய் உபதேசித்த தட்சிணாமூர்த்தி, ஆதி நாயகனும் அல்லவா? அவ்விடத்தினால் நீலம் பாரித்தபோது, அதை அந்த அரசனின் கண்டத்திலே அடக்கி வைத்தாள் அன்னை சூலி! அதில் சுயநலம் இல்லை, பொது நலம்தான்! ஆனாலும் புரிந்து கொள்ளாத உலகமோ, சூலி சிவனின் கழுத்தைப் பிடித்தாள் என்று அரசல் புரசலாகப் (மேலோட்டமாக) பேசுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...