மார்ச் 06, 2009

தமிழ் என்னும் கடலில் மூழ்கி…

இந்த புதுகவிதை..நான் புகுமுக வகுப்பிலே படித்துக் கொண்டிருக்கும் போது, 1976-ல் எழுதப்பட்டது. வேலூர் ஊரிசு கல்லூரி கவிதைப் போட்டியிலே முதற்பரிசு வென்ற கவிதை… தமிழை பழகும் வகையிலே சொல்லித்தராமல்,பள்ளிகளில் இலக்கண பூதத்தைக் காட்டி,
விரட்டி தமிழ் ஆர்வத்தை தேய்த்துவிடுவதை கண்டு மனம் நொந்து எழுதப்பட்டது.

உயிரெழுத்தாம் மெய்யெழுத்தாம்
போதாவென்று உயிர்மெய்யெழுத்தாம்
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
மூழ்கி உணர்ந்து படித்தாலும்
மூளைக்கெட்டாப் போகுமென்றேன்!
நில்லென்றார். நின்றேன்! – பின்னால்
தமிழ் படையின் தலைவர் கூட்டம்!
ஆகுபெயர் ஆகாத தொழிற்பெயர்
எனக்கொவ்வாப் பண்பு பெயர்
இன்னும் எத்துணைப் பெயர்!
ஐயோ ஆளை விடுமென்று
என்றெடுத்தேன் ஓட்டம்ஸ
அதற்குள்ளா என்றென்னைப்
பிடித்திழுத்து வைத்து,
முற்றியதும் முற்றாததும்,
எச்சங்களும் எட்டிப்பிடிக்க
புணரியலும் யாப்பியலும்
அணி இலக்கணமும்
அணிவகுத்து துரத்திவர..
ஐயா.. போதுமது போதும்
தங்கத் தமிழ்தான்..
வங்கத் தமிழ்தான்..
சிங்கத் தமிழ்தான்..
கங்கைத் தமிழ்தான்..
கடாரத் தமிழ்தான்
டாரத் தமிழ்தான்..
தமிழ்தான்..
மிழ்தான்..
தான்..
ன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...