ஜனவரி 04, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 5

येषां गच्छति पूर्वपक्षसरणिं कौमुद्वतः श्वेतिमा
येषां सन्ततमारुरुक्षति तुलाकक्ष्यां शरच्चन्द्रमाः
येषामिच्छति कम्बुरप्यसुलभामन्तेवसत्प्रक्रियां
कामाक्ष्या ममतां हरन्तु मम ते हासत्विषामङ्कुराः ५॥

யேஷாம் ³ச்ச²தி பூர்வபக்ஷ ஸரணிம் கௌமுத்³வத: ஶ்வேதிமா
யேஷாம் ஸந்ததமாருருக்ஷதி துலா கக்ஷ்யாம் ஶரச் சந்த்³ரமா:
யேஷாமிச்ச²தி கம்பு³ரப்ய ஸுலபாமந்தே வஸத் ப்ரக்ரியாம்
காமாக்ஷ்யா மமதாம் ஹரந்து மம தே ஹாஸ த்விஷா மங்குரா: 5

ஆம்பல் மலர்களின் வெண்ணிறம் எவற்றுக்கு வளர்பிறைபோல் முன்னோடியோ, சரத்கால சந்திரன் எதற்கு இணை என்னும் நிலையை மெல்ல எட்டிப் பிடிக்க விரும்புகிறானோ, சங்கும் எதனிடமிருந்து பயிற்சி பெறும் சீடனென்னும் நிலையை அடைய விரும்புகிறதோ, காமாட்சியின் அத்தகு புன் சிரிப்பின் ஒளிக்கதிர்கள் என்னுடைய மமதையைப் போக்கட்டும்!

எதற்காம்பல் வெண்மை எழுபிறை போன்றதோ, எட்டுவதால்
எதற்குக்கார் சந்திரன் ஈங்கிணை யாக இவறுவனோ
எதன்சீடன் என்ன இவறுமோ வெண்சங்கும், இன்னகையாம்
அதனொளி மேட்டிமை அற்றென்னில், காமாட்சீ! ஆற்றுகவே!

எழுபிறை-வளர்பிறை; கார்-சரத்காலம்; இவறல்-விரும்புதல்; மேட்டிமை-மமதை;

ஜனவரி 03, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 4

या पीनस्तनमण्डलोपरि लसत्कर्पूरलेपायते
या नीलेक्षणरात्रिकान्तिततिषु ज्योत्स्नाप्ररोहायते
या सौन्दर्यधुनीतरङ्गततिषु व्यालोलहंसायते
कामाक्ष्याः शिशिरीकरोतु हृदयं सा मे स्मितप्राचुरी ४॥

யா பீன ஸ்தன மண்ட³லோபரி லஸத் கர்பூர லேபாயதே
யா நீலேக்ஷண ராத்ரி காந்தி ததிஷு ஜ்யோத்ஸ்னா ப்ரரோஹாயதே
யா ஸௌந்த³ர்ய துனீ தரங்க³ ததிஷு வ்யாலோல ஹம்ஸாயதே
காமாக்ஷ்யா: ஶிஶிரீ கரோது ஹ்ருʼ³யம் ஸா மே ஸ்மித ப்ராசுரீ 4

எது பருத்த மார்பகங்கள்மேல் ஒளிரும் கற்பூரப் பூச்சாகுமோ, எது கருத்த கடைக்கண்களாம் இரவிலினில் நிலா முளைவாய் தோன்றுமோ, எது அழகென்னும் ஆற்றலை ஆவளிகளில் அங்குமிங்கும் நீந்தும் அன்னமாகுமோ, அந்த காமாட்சியின் நிறைந்த புன்சிரிப்பென் இதயத்தைக் குளிர்விக்கட்டுமே!

பருத்த தனங்கள்மேல் பாமக்கற் பூரப் பரவலேதோ
கருத்த கடைக்கண் களாமிர வில்நிலாக் காலதேதோ
அரியாற்ற லைக்கங்கில் அங்குமிங் கும்நீந்தும் அன்னமேதோ
புரிகவக் காமாட்சீ புன்சிரி உள்ளம் புனல்பெறவே


பாமம்-ஒளி; பரவல்-பூச்சு; கால்-முளை; அரி-அழகு; கங்கு-வரிசை; புனல்-குளிர்ச்சி!

ஜனவரி 02, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 3

कर्पूरद्युतिचातुरीमतितरामल्पीयसीं कुर्वती
दौर्भाग्योदयमेव संविदधती दौषाकरीणां त्विषाम्
क्षुल्लानेव मनोज्ञमल्लिनिकरान्फुल्लानपि व्यञ्जती
कामाक्ष्या मृदुलस्मितांशुलहरी कामप्रसूरस्तु मे ३॥

கர்பூர த்³யுதி சாதுரீ மதிதராமல்பீயஸீம் குர்வதீ
தௌ³ர்பாக்³யோத³யமேவ ஸம்வித³தீ தௌ³ஷாகரீணாம் த்விஷாம்
க்ஷுல்லானேவ மனோஜ்ஞ மல்லி நிகரான் பு²ல்லானபி வ்யஞ்ஜதீ
காமாக்ஷ்யா ம்ருʼது³ல ஸ்மிதாம்ஶு லஹரீ காம ப்ரஸூரஸ்து மே 3

கற்பூர ஒளியின் அழகை மிகவும் குறைவாகச் செய்வதும், சந்திர காந்திக்கு அரிட்டம் (துர்பாக்கியம்) உதிக்க நன்கு செய்வதும், நன்கு மலர்ந்த மல்லிகை மலர்கூட்டங்களையும் தாழ்வாகவே தோன்றும்படி செய்வதாயுமுள்ள காமாக்ஷியினுடைய மென்னகை அலைவெள்ளமாவது, என் விருப்பங்களை எனக்கு கொடுக்கட்டும்!

கற்பூரக் காந்திக் கவின்குன்றல் செய்திடும், காந்தியில்சோ
மற்கரிட் டம்தோற்ற மாக்கும், மலர்ந்தநற் மல்லிகைப்பூச்
சுற்றமும் தாழ்வாகத் தோன்றச்செய், காமாட்சீ, சோடையெலாம்,
வற்றாவுன் மென்னகை வங்கப் பெருக்கு, வழங்குகவே!

காந்தி-ஒளி; கவின்-அழகு; குன்றல்-குறைகை; சோமன்-சந்திரன்; அரிட்டம்-துர்பாக்கியம்; சுற்றம்-கூட்டம்; சோடை-விழைவு/விருப்பம்; வங்கம்-அலை;


பொருள் கொள்ளுகையில், "தோன்றச்செய் வற்றாவுன் மென்னகை வங்கப்பெருக்கு, காமாட்சீ, சோடையெலாம் வழங்குகவே" என்று கூட்டிப் படிக்கவேண்டும்!

ஜனவரி 01, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 2

सध्रीचे नवमल्लिकासुमनसां नासाग्रमुक्तामणे-
आचार्याय मृणालकाण्डमहसां नैसर्गिकाय द्विषे
स्वर्धुन्या सह युध्वेन हिमरुचेरर्धासनाध्यासिने
कामाक्ष्याः स्मितमञ्जरीधवलिमाद्वैताय तस्मै नमः २॥

ஸத்ரீசே நவமல்லிகா ஸுமனஸாம் நாஸாக்³ர முக்தாமணே:
ஆசார்யாய ம்ருʼணால காண்ட³ மஹஸாம் நைஸர்கி³காய த்³விஷே
ஸ்வர்துன்யா ஸஹ யுத்வேன ஹிமருசேரர்தாஸனாத்யாஸினே
காமாக்ஷ்யா: ஸ்மிதமஞ்ஜரீ தவலிமாத்³வைதாய தஸ்மை நம: 2

நவமல்லிப் பூவிற்கு ஒப்பானதும், நாசியின் நுனியில் தொங்கும் புல்லாக்கணியின் முத்துக்கு ஆசிரியனும், தாமரைத்தண்டின் உள்ளொளிக்கு இயற்கையில் எதிரியும், ஆகாயக்கங்கையோடு சண்டையிடுவதும், நிலவின் பாதியில் அமர்வதுமான காமாட்சியின் புன்சிரிப்பின் நிகரற்ற வெண்மைக்கு என் வணக்கங்கள்!

நவமல்லிக் கொப்பாயும் நாசி யணிமுத்தின் நற்குருவும்
கவின்கயத் தண்டினுள் காந்திக் கியற்கையில் காணலனும்
துவந்துவம் கங்கைத் துனியொடு செய்வதும் சோமனமர்
உவமையில் மென்னகை ஒண்மைக்கென், காமாட்சீ, உட்சரணே!


நாசியணி-புல்லாக்கு; கவின்-அழகு; கயம்-தாமரை; காந்தி-ஒளி; காணலன்-எதிரி; துவந்துவம்-சண்டை; துனி-நதி; சோமன்-சந்திரன்; உவமை-ஒப்பென்று சொல்லவொன்று; மென்னகை-சிரிப்பு; ஒண்மை-ஒளி/வெண்மை;

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...