ஜனவரி 02, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 3

कर्पूरद्युतिचातुरीमतितरामल्पीयसीं कुर्वती
दौर्भाग्योदयमेव संविदधती दौषाकरीणां त्विषाम्
क्षुल्लानेव मनोज्ञमल्लिनिकरान्फुल्लानपि व्यञ्जती
कामाक्ष्या मृदुलस्मितांशुलहरी कामप्रसूरस्तु मे ३॥

கர்பூர த்³யுதி சாதுரீ மதிதராமல்பீயஸீம் குர்வதீ
தௌ³ர்பாக்³யோத³யமேவ ஸம்வித³தீ தௌ³ஷாகரீணாம் த்விஷாம்
க்ஷுல்லானேவ மனோஜ்ஞ மல்லி நிகரான் பு²ல்லானபி வ்யஞ்ஜதீ
காமாக்ஷ்யா ம்ருʼது³ல ஸ்மிதாம்ஶு லஹரீ காம ப்ரஸூரஸ்து மே 3

கற்பூர ஒளியின் அழகை மிகவும் குறைவாகச் செய்வதும், சந்திர காந்திக்கு அரிட்டம் (துர்பாக்கியம்) உதிக்க நன்கு செய்வதும், நன்கு மலர்ந்த மல்லிகை மலர்கூட்டங்களையும் தாழ்வாகவே தோன்றும்படி செய்வதாயுமுள்ள காமாக்ஷியினுடைய மென்னகை அலைவெள்ளமாவது, என் விருப்பங்களை எனக்கு கொடுக்கட்டும்!

கற்பூரக் காந்திக் கவின்குன்றல் செய்திடும், காந்தியில்சோ
மற்கரிட் டம்தோற்ற மாக்கும், மலர்ந்தநற் மல்லிகைப்பூச்
சுற்றமும் தாழ்வாகத் தோன்றச்செய், காமாட்சீ, சோடையெலாம்,
வற்றாவுன் மென்னகை வங்கப் பெருக்கு, வழங்குகவே!

காந்தி-ஒளி; கவின்-அழகு; குன்றல்-குறைகை; சோமன்-சந்திரன்; அரிட்டம்-துர்பாக்கியம்; சுற்றம்-கூட்டம்; சோடை-விழைவு/விருப்பம்; வங்கம்-அலை;


பொருள் கொள்ளுகையில், "தோன்றச்செய் வற்றாவுன் மென்னகை வங்கப்பெருக்கு, காமாட்சீ, சோடையெலாம் வழங்குகவே" என்று கூட்டிப் படிக்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...