ஜூலை 03, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -84

कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी
निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी
मनःपथदवीयसी मदनशासनप्रेयसी
महागुणगरीयसी मम दृशोऽस्तु नेदीयसी ८४॥

கவீந்த்³ர ஹ்ருʼ³யே சரீ பரிக்³ருʼஹீத காஞ்சீபுரீ
நிரூடகருணாசரீ நிகி²ல லோக ரக்ஷாகரீ
மன: பத²³வீயஸீ மத³ன ஶாஸன ப்ரேயஸீ
மஹாகு³ண க³ரீயஸீ மம த்³ருʼஶோஸ்து நேதீ³யஸீ 84

கவி வல்லோர் இதயங்களில் உலவுபவளும், காஞ்சிபுரியைத் தங்குமிடமாகக் கொண்டவளும், நிறைந்த கருணை வெள்ளமுள்ளவளும், அனைத்து உலகங்களையும் காப்பவளும், மனதிற்கு எட்டாதவளும், காமாரியின் காதலியும், உத்தம குணங்களால் பெருமையுற்றவளுமான தேவி என்னுடைய கண்களுக்கு எப்போது நெருங்கியவளாவாளோ?

கவிவல்லோர் உள்ளங் களிளே உலவுவள்; காஞ்சியினை
உவப்பள்; நிறையன்பின் ஓதம் உடைத்தவள்; ஓம்பிடுவாள்
புவியெலாம்; உள்ளம் புகவெட்டாள்; காமன் புடைக்கினியள்;
பவித்திரப் பண்புடை பாமையென் பார்வைக்குப் பக்கமென்றே?

ஓதம்-வெள்ளம்; ஓம்பு-காத்தல்; புடை-பகை; பவித்திரம்-உத்தம்; பாமை-ஒளிமிக்கவள்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கவி வல்லோர் உள்ளங்களிளே உலவுவள்; காஞ்சியினை உவப்பள்; நிறை அன்பின் ஓதம் உடைத்தவள்; ஓம்பிடுவாள் புவியெலாம்; உள்ளம் புக எட்டாள்; காமன் புடைக்கு இனியள்; பவித்திரப் பண்புடை பாமை என் பார்வைக்குப் பக்கமென்றே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...