ஜூன் 25, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -76

धन्या धन्या गतिरिह गिरां देवि कामाक्षि यन्मे
निन्द्यां भिन्द्यात्सपदि जडतां कल्मषादुन्मिषन्तीम्
साध्वी माध्वीरसमधुरताभञ्जिनी मञ्जुरीतिः
वाणीवेणी झटिति वृणुतात्स्वर्धुनीस्पर्धिनी माम् ७६॥

ன்யா ன்யா ³திரிஹ கி³ராம் தே³வி! காமாக்ஷி! யன்மே
நிந்த்³யாம் பிந்த்³யாத் ஸபதி³ ஜட³தாம் கல்மஷாது³ன்மிஷந்தீம்
ஸாத்வீ மாத்வீரஸ மதுரதா பஞ்ஜினீ மஞ்ஜுரீதி:
வாணீ வேணீ டிதி வ்ருʼணுதாத் ஸ்வர்துனீ ஸ்பர்தினீ மாம் 76

தேவி காமாக்ஷி! பாவங்களிலிருந்து உதிக்கும், நிந்திக்கத்தக்க என்னுடைய அறியாமையை விரைந்து போக்கும், அழகியதும், தேனினும் இனிய, தேவ கங்கைப்பெருக்கிற்கு இணையான, அழகின் முறையுள்ளதான வாக்கின் வரிசையானது என்னை விரைவில் வரித்து, மிகவும் மேன்மையாயுள்ள கவிப்பெருக்கானது எனக்கு உண்டாக வேண்டும்!

பாவத் துதிக்கும் பழிகொள் அறியாமை பாய்ந்துநீங்க,
தேவகங் கைக்கீடும், தேனினின் கங்கையாம் தீர்த்தவாலை
மேவ, அழகதன் வீதியாம் சொன்முறை வேகமென்னில்
பாவ, எனக்குயர் பாவன்மை காமாட்சீ! பற்றுகவே!

பாய்ந்து-விரைந்து; ஈடு-இணை; ஆல்-வெள்ளம்/பெருக்கு; மேவ-ஓங்க; வீதி-வரிசை, பாவ-பரவ;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பாவத்து உதிக்கும் பழிகொள் அறியாமை பாய்ந்து நீங்க, தேவ கங்கைக்கு ஈடும், தேனின் இன் கங்கையாம் தீர்த்த ஆலை மேவ, அழகதன் வீதியாம் சொன்முறை வேகம் என்னில் பாவ, எனக்குயர் பாவன்மை, காமாட்சீ! பற்றுகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...