ஜூன் 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -72

आधून्वन्त्यै तरलनयनैराङ्गजीं वैजयन्तीम्
आनन्दिन्यै निजपदजुषामात्तकाञ्चीपुरायै
आस्माकीनं हृदयमखिलैरागमानां प्रपञ्चैः
आराध्यायै स्पृहयतितरामादिमायै जनन्यै ७२॥

ஆதூன்வந்த்யை தரல நயனைராங்க³ஜீம் வைஜயந்தீம்
ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷா மாத்த காஞ்சீபுராயை
ஆஸ்மாகீனம் ஹ்ருʼ³யமகி²லை ராக³மாநாம் ப்ரபஞ்சை:
ஆராத்யாயை ஸ்ப்ருʼஹயதிதராமாதி³மாயை ஜனன்யை 72

அலையும் கண்களால், அங்கசனின் கௌரவத்தை அசைப்பவளும், தனது திருவடியை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவளும், காஞ்சிபுரத்தை அடைந்தவளும், அனைத்து வேதங்களாலும் உலகத்தில் பூசனைக்குரியவளும், ஆதி மாயையும் அன்னையுமானவளை நமது இதயம் மிகவும் விழைந்து இருக்கிறது.

அலையும் விழிகளால் அங்கசன் மானம் அசைத்திடுவாள்;
கலைக்காஞ்சி சேர்ந்து, கழலணைந் தார்க்குக் களிப்பருள்வாள்;
நிலைமறை யெல்லாமும் நித்தம்பூ சிப்பவள்; நின்றவள்பால்
வலைப்பட்டு தாயாதி மாயையை வீக்கும் மனம்நமக்கே!

அலையும்-சஞ்சலிக்கும்; அங்கசன்-மன்மதன்; மானம்-கௌரவம்; கழல்-திருவடிகள்; அணைதல்-சேர்ந்தார்க்கு; வலைப்பட்டு-ஆட்பட்டு; வீக்கும்-விழையும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அலையும் விழிகளால் அங்கசன் மானம் அசைத்திடுவாள்; கலைக் காஞ்சி சேர்ந்து, கழல் அணைந்தார்க்குக் களிப்பருள்வாள்; நிலை மறையெல்லாமும் நித்தம் பூசிப்பவள்; நின்றவள்பால் வலைப்பட்டு தாய் ஆதி மாயையை வீக்கும் மனம் நமக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...