ஆகஸ்ட் 04, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 55

ओष्ठप्रभापटलविद्रुममुद्रिते ते
भ्रूवल्लिवीचिसुभगे मुखकान्तिसिन्धौ
कामाक्षि वारिभरपूरणलम्बमान-
कालाम्बुवाहसरणिं लभते कटाक्षः 55

ஓஷ்ட ப்ரபா படல வித்ரும முத்ரிதே தே
ப்ரூவல்லிவீசி ஸுபகே முககாந்தி ஸிந்தௌ |
காமாக்ஷி வாரி பர பூரண லம்பமான-
காலாம்புவாஹ ஸரணிம் லபதே கடாக்ஷ: ||55||

காமாக்ஷியே, உன் உதடுகளின் சிவப்பாம் பவழக்கொடிகளும், புருவக் கொடிகளாம் அலைகளோடும் உள்ள உனது வதன ஒளியாம் கடலினுள் மூழ்கி, நீரரருந்தும் கருமேக வரிசைபோல உன் கடைக்கண் விளங்குகிறது.

செவ்விதழ் மேவும் சிவப்பாம் பவழத் திரிகளொடு
செவ்விய பூருத் திரியாம் திரையொடு சேர்ந்துநின்றன்
செவ்வி யவதன தேசாம் கடலில் திளைத்துநீருண்
வெவ்வர்தீர் மேக விததிகா மாட்சீ விழிக்கடையே

திரி - கொடி; செவ்வி - அழகு; பூரு -புருவம்; திரை-அலை; தேசு - ஒளி; வெவ்வர் - வெம்மை; விததி - வரிசை, கூட்டம்; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...