மே 03, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 63

कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः
कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नःप्रतिभा 63

கௌதுகினா கம்பாயாம் கௌஸும சாபேன கீலிதேனாந்த: |
குலதைவதேன மஹதா குட்மல முத்ராம் துனோது : ப்ரதிபா ||63||

கம்பை நதிக்கரையில் விருப்பமுள்ளதும்,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட (அல்லது மலர் பாணங்களையுடைய) வில்லை உடையவனாம் மன்மதனால் காதல் நிரம்பிய மனமுள்ளதும்,  உயரிய குலதெய்வமாக உள்ளதுமாய ஒன்றினால் என் அறிவு மொட்டிலிருந்து மாறி மலராகட்டும்.

கம்பைக் கரையில் களிக்க விரும்பிடும் காரிகையாள்
அம்புகள் பூக்கும் அழகுவில் ஏந்தும் அநங்கனவன்
தம்திறத் தாலுளம் தங்கிடும் காதல் தளும்பியவள்

எம்குலத் தேவால் எதிரும் அரும்பாம் எனதறிவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...