ஜூலை 03, 2014

குறளின் குரல் - 805

3rd Jul 2014

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
                        (குறள் 799: நட்பாராய்தல் அதிகாரம்)

கெடுங்காலைக் - ஒருவர் தமக்கு கேடு வரும்போது
கைவிடுவார் -அவரைக் கைவிடுகிறவரோடு கொண்ட
கேண்மை - நட்பு
அடுங்காலை - அவரை கூற்றுவன் கொன்று தின்றபோதும்
உள்ளினும் - நினைக்குந்தோறும்
உள்ளஞ் சுடும் - நண்பர் நெருக்கடியான காலத்தில் கைவிட்டதை எண்ணி நெஞ்சமானது சுட்டெரிக்கும்

இக்குறளும் ஆராயாமல் செய்த நட்பினால் நினைந்து வருந்தக்கூடிய நிலையைச் சுட்டுகிற குறள். அதன்மூலமாக, ஆராய்ந்து நட்பினைக் கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்துகிற குறள்.

ஒருவருக்கு கேடுதரும் நிகழ்வுகளின் போது, அவரை அவற்றின் தாக்கத்திலிருந்து காக்கவோ, நீக்கவோ செய்யாத நட்பு, தக்க நேரத்தில் கைவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கவும் அல்லது ஓடிப்போகவும் செய்கிற நட்பைப் போல நெஞ்சைச் சுட்டெரிக்கும் ஒன்றில்லை. அத்தகையோரை கூற்றுவன் கொன்று தின்ற போதும் நெஞ்சானது சுட்டெரிக்கும் அதை நினைக்கும் போதெல்லாம்.

இத்தகையோரைப்பற்றியும் கூறும்விதமாக, நாலடியார் பாடலொன்று:

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலராவர் - ஏலா

இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர். ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

இன்னா நாற்பது பாடல் வரி இதை ஒரு வரியில் சொல்கிறது. “இன்னா,கெடும் இடம் கைவிடுவார் நட்பு”.

Transliteration:

keDunkAlaik kaivIDuvAr kENmai aDunkAlai
uLLInum uLLanj chuDum

keDunkAlaik – When someone is troubled waters
kaivIDuvAr – without being a support or even running away from them
kENmai – friendship of such people
aDunkAlai – when the death lord kills
uLLInum -  even if the though crosses the mind
uLLanj chuDum – it will burn the heart with pain (thinking of the let down or defection)

Another verse underlining the trouble caused by not thinking about the right friendship before making one and thus stressing on choosing the right friendship.

A friendship that does not protect and even run away during the times of trouble will burn a person’s heart even when the death is at his doorstep; such defection is extremely painful everytime a person thinks about it.

A verse in nAlaDiyAr says there are many people like distant stars on the sky during the troubing times. Only a few may perhaps stick around when extreme poverty strikes. The work of “innA nArpadu” says it in one line, “painful it is to have have friends that defect during crucial times”.

“Defection and letting down by friendship during the times of trouble
 is burningly painful to mind, even when death throws one in rubble

இன்றெனது குறள்:


துன்பத் துதவாமல் நீங்குநட்பு கூற்றுகொன்று
தின்றபோதும் நெஞ்சைச் சுடும்

thunbath tudavAmal nIngunaTpu kURRukonRu
thinRapODum nenjaich chuDum

ஜூலை 02, 2014

குறளின் குரல் - 804

2nd Jul 2014

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
                        (குறள் 798: நட்பாராய்தல் அதிகாரம்)

உள்ளற்க - நினையாதீர்
உள்ளம் - ஊக்கத்தைக்
சிறுகுவ - குறைக்கும் செயல்களை
கொள்ளற்க - கொள்ளாதீர்
அல்லற்கண் - துன்பத்தே
ஆற்று அறுப்பார் - எதிர்கொள்ளும், நீக்கும் வழிகளைச் சொல்லாது, கைவிடுகின்றவர்
நட்பு - நட்பினை

எவ்வாறு ஊக்கத்தினைக் குறைத்தோ, கெடுத்தோ செய்கின்ற செயல்களை ஒருவர் நினைத்துப் பார்க்கக்கூடாதோ, அதேபோன்று, துன்பம் வந்தபோது விலக்குகின்ற அல்லது எதிர்கொள்ளும் வழிகளைச் சொல்லி ஆற்றுப்படுத்தாது கைவிடுகின்றவர் நட்பையும் கைகொள்ளாது கைவிடுதல் வேண்டும் என்கிறது இக்குறள்.

இரண்டு கருத்துக்களுமே அவற்றின் வழிநின்று செய்யவேண்டுவனவற்றையே சொன்னாலும், எப்படி ஊக்கமும் நட்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவாயின என்பது வள்ளுவருக்கே வெளிச்சம். பொருத்தமில்லா உவமையாகவே தோன்றுகிறது. ஊக்கத்தைக் குறைத்து ஆக்கத்தைக் கெடுக்கும் செயல்களைச் செய்தால் துன்பம் வருவது இயற்கை. ஒருவேள அவ்வாறு செய்யாதீர் என்று எச்சரித்துவிட்டு, பிறகு அவ்வாறு செய்து துன்பம் வரும்போது உதவாத நட்பை கைகழுவுவதுபற்றிச் சொன்னாரோ?

Transliteration:

uLLRka uLLam siRuguva koLLaRka
allaRkaN ARRaruppAr naTpu

uLLRka – never think of (deeds)
uLLam – enthusiasm
siRuguva - diminishing
koLLaRka – never have
allaRkaN – when grief sets in
ARR(u) aruppAr – that which does not help to remove or at least face with courage
naTpu – such friendship

Like how a person should not even think of deeds that diminish ones fervor, one should not have friendship that does not help to remove or at least face with tact, when grief sets in, says this verse.

Though both thoughts says what one must adopt in his life, it is difficult to see how they are related in a metaphorical context to each other. Perhaps only vaLLuvar knows. Perhaps the connection is an implied one here! It is true that deeds done to diminish a person’s fervor are to be avoided and when done despite, may bring grief;  when such grief sets in, the friendship that does not help to resolve needs to be cut off.

“Fervor diminishing acts must, one avoid even if strife
 So must be the friendship, that does not help in grief”

இன்றெனது குறள்:


ஊக்கம் குறைக்கும் செயல்களும் துன்பத்தே
நீக்காது நீங்குநட்பும் நீக்கு

Ukkam kuRaikkum seyalgaLum thunbaththE
nIkkAdu nIngunaTpum nIkku

ஜூலை 01, 2014

குறளின் குரல் - 803

st Jul 2014

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
                        (குறள் 797: நட்பாராய்தல் அதிகாரம்)

ஊதியம் என்பது ஒருவற்குப் - ஒருவருக்கு ஈட்டம் அல்லது வருவாய் என்பது
பேதையார் - அறிவிலிகளின்
கேண்மை - நட்பை
ஒரீஇ விடல் - கொள்ளாது கைவிடுதலாம்; கொண்டிருந்தால் துறப்பதாம்.

ஒருவர் அவர் வாழ்வில் ஈட்டிய வருமானம் என்பது நல்ல நண்பர்கள் என்பதை விட, அறிவிலிகளின் நட்பைக் கைக்கொள்ளாது தவிர்ப்பதாம். அப்படியே கொண்டிருந்தாலும் துறப்பதாம். இக்குறளின் கருத்தையே வேறுவிதமாக நட்போடு சொல்லாமல், பேதைமை மற்றும் ஊதியத்தை மையமாகக் கொண்டு பின்வரும் பேதைமை அதிகாரம் இவ்வாறு சொல்லுகிறது, “பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். அதாவது,பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்” உள்ளுரையாக கேடு தருவதில் ஒன்றாக அறிவிலிகளின் நட்பையும் கொள்ளலாம்.

Transliteration:

Udiyam enbadu oruvaRkup pEdaiyAr
kENmai orIi viDal

Udiyam enbadu oruvaRkup – True earnings of a person is
pEdaiyAr - fools
kENmai - friendship
orIi viDal – not have in the first place; or forsake, if already is in friendship

More than having a good friend, the real earnings of a person, is to avoid first fools’ friendship; if there is a friendship already, renounce it with without remorse. A similar verse centered around foolishness and earnings is said in the chapter of “foolishness”. That verse says, the foolishness is, going for bad and letting go, the real earnings; fools friendship is to be construed as one of the bad things.

“To avoid or forsake the friendship with fools
 is the true earnings and shall avoid redicules”

இன்றெனது குறள்:

அறிவிலிகள் நட்பைத் துறப்பதே ஈட்டம்
அறிந்திதைக் கொள்வதாம் நட்பு

aRiviligaL naTpaith thuRappadE ITTam

aRindidaik koLvadAm naTpu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...