மார்ச் 12, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 73

वैमल्यं कुमुदश्रियां हिमरुचः कान्त्यैव सन्धुक्ष्यते
ज्योत्स्नारोचिरपि प्रदोषसमयं प्राप्यैव सम्पद्यते
स्वच्छत्वं नवमौक्तिकस्य परमं संस्कारतो दृश्यते
कामाक्ष्याः स्मितदीधितेर्विशदिमा नैसर्गिको भासते ७३॥

வைமல்யம் குமுத³ஶ்ரியாம் ஹிமருச: காந்த்யைவ ஸந்துக்ஷ்யதே
ஜ்யோத்ஸ்னாரோசிரபி ப்ரதோ³ஷஸமயம் ப்ராப்யைவ ஸம்பத்³யதே
ஸ்வச்ச²த்வம் நவமௌக்திகஸ்ய பரமம் ஸம்ஸ்காரதோ த்³ருʼஶ்யதே
காமாக்ஷ்யா: ஸ்மிததீ³திதேர்விஶதி³மா நைஸர்கி³கோ பாஸதே 73

குமுத மலர்களுக்கு (வெள்ளாம்பல்) வெண்ணிறம் வெண்மதிக் காந்தியினாலேயே வளர்க்கப்படுகிறது! நிலவின் ஒளியும் இரவை அடைவதால்தான் ஏற்படுகிறது. சீர்மை செய்வதாலேயே புதிய முத்துக்கு உயரிய வெண்மையும் பார்க்கப்படுகிறது! ஆனால் காமாக்ஷியின் புன்சிரிப்பினுடைய வெண்மையானது இயல்பில் தோன்றியதாகவே விளங்குகிறது.

வெள்ளாம்பல் பூக்கட்கு வெண்ணிறக் காந்தியும் வெண்மதியால்
நள்ளடைந் தேயல்லோன் நன்னரை கொள்ளும்; நவநகையும்
வெள்ளைகாண் சீர்மையால்; விந்தையே உன்னணி வெண்ணகையின்
ஒள்ளிமை! காமாட்சீ, உன்றனி யல்பாய் உதித்தவொன்றே!

நள்-இரவு; அல்லோன்-சந்திரன்; நரை-வெண்மை; நவ-புதிய; நகை-முத்து; அணி-அழகு.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


வெள்ளாம்பல் பூக்கட்கு வெண்ணிறக் காந்தியும் வெண்மதியால்; நள் அடைந்தே அல்லோன் நன்னரை கொள்ளும்; நவநகையும் வெள்ளைகாண் சீர்மையால்; விந்தையே உன்னணி வெண்ணகையின் ஒள்ளிமை! காமாட்சீ, உன்றன் இயல்பாய் உதித்தவொன்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...