மார்ச் 12, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 72

ज्योत्स्ना किं तनुते फलं तनुमतामौष्ण्यप्रशान्तिं विना
त्वन्मन्दस्मितरोचिषा तनुमतां कामाक्षि रोचिष्णुना
सन्तापोपि  निवार्यते नववच: [यः] प्राचुर्यमङ्कूर्यते
सौन्दर्यं परिपूर्यते जगति सा कीर्तिश्च संचार्यते ७२॥

ஜ்யோத்ஸ்னா கிம் தனுதே ²லம் தனுமதா மௌஷ்ண்ய ப்ரஶாந்திம் வினா
த்வன் மந்த³ஸ்மித ரோசிஷா தனுமதாம் காமாக்ஷி ரோசிஷ்ணுனா
ஸந்தா போபி நிவார்யதே நவவச: [ய:] ப்ராசுர்ய மங்கூர்யதே
ஸௌந்த³ர்யம் பரிபூர்யதே ஜக³தி ஸா கீர்திஶ்ச ஸம்சார்யதே 72

காமாக்ஷீ! நிலவால், வெப்பத்தைத் தணிப்பதைத் தவிர வேறென்ன பயனாம் உலகோர்க்கு? உன்புன்னகைக் காந்தியோ உலகோர் தாபம் தணிக்கிறது; என்றும் புதிதாய் பேசுந்திறன் தருகிறது; அழகால் நிரப்புகிறது; உயர்ந்த புகழை உலகெங்கும் பரவும்படி செய்துவிடுகிறது; ஆதலின் உன் மந்தகாசமே நிலவைவிட உயர்ந்தென்பதில் என்ன இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியும்?

நிலவினா லாறென் நிதாகம் உலகோர்க்கு நீக்குவதின்?
உலகோர்குத் தாபம் உடன்நீக்கி, வேறாய உத்திவாக்கை
துலங்கவுந் தந்து ,சுபம்நிறைத் துப்,பூவில் சொல்தரவும்,
மலர்மென் நகையினும் மற்றேதாம் காமாட்சீ மாநிலத்தே!

ஆறு-பயன்; நிதாகம்-வெப்பம்; வேறாய-புதிதாய; உத்தி-பேச்சு; சுபம்-புகழ்; பூ-உலகு; சொல்-புகழ்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


நிலவினால் ஆறு என்? நிதாகம் உலகோர்க்கு நீக்குவதின்! உலகோர்குத் தாபம் உடன் நீக்கி, வேறாய உத்திவாக்கை, துலங்கவுந் தந்து, சுபம் நிறைத்துப்,பூவில் சொல்தரவும், மலர் மென்நகையினும் மற்று ஏதாம் காமாட்சீ மாநிலத்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...