அக்டோபர் 31, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -6

கலித்தொகைச் சொல்லும் அன்றைய கருத்து:

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 18  :  10 – 11

பொருள்:
இல்லற வாழ்க்கையாவது – கணவனும் மனைவியும் வாழ்நாள் வரையும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும் ஒவ்வொரு சமயம் ஒன்றன் கூறாடையை உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் வருந்தாது – உள்ளம் ஒன்றிக்கலந்து பிரியாது இருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை !.

இன்றைய காட்சி எப்படி?

வழக்கு மன்றங்களின் படிகளில் வாழ்க்கை ஏறி, மணமுறிவுகள் மலிந்துவிட்ட இக்காலத்தில், கருத்தடைக் கருவிகள் கற்பை சில ரூபாய்களுக்குள் முடிந்துகொண்டுவிட்ட இக்காலத்தில், திருமணம் ஆவதை விட, மணமுறிவுகள் மிகவும் வேகமாக நடைபெறுவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

புரிதலின்மை, புரிதலுக்கு மனமின்மை, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற வாழ்க்கை முறை இவையே இவற்றுக்குக் காரணம். அற்ப காரணங்களுக்காக மணமுறிவு கோருவது மிகவும் சாதாரண காட்சியாக ஆகிவிட்டது இன்று. கடைசி மாற்றுவழியாக இருக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு, ஒரு வசதியான கருவியாக மாட்டிக்கொண்டு அத்தகைய மணமுறிவுகளை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன என்றே தோன்றுகிறது..

அந்த வருத்தத்தில் எழுதியது:

அறத்தின் வழியினில் இல்லறம் பூண்டு
சிறப்புடன் வாழ்ந்தனர் அன்று - மறந்தே
துறக்கவும் தூக்கி எறியவும் தோதாம்
உறவுக ளெல்லாமே இன்று

கணவன் மனைவி உறவுகள் எல்லாம்
இணங்கும் வரைதானென் றாச்சு - வணங்கி
அணங்கை அனுசரித் தாலே மணக்கும்
தணலாய் தகிக்குமன் றி

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -5

சமீபத்திய பருப்பு பதுக்கலைப் பற்றி எல்லோரும் படித்திருப்போம். பதுக்கல் என்பதும் காலம் காலமாக நடந்துவரும் ஒரு இழிச்செயல்தான் என்பதற்கு கீழ்வரும் கலித்தொகைப் பாடல் வரிகளே சான்று.

இப்பதுக்கல்களுக்குப் பின்னால் வர்த்தகப் பேராசையுடன், அரசியல் விளையாடல்களும் கலந்தே இருப்பது உண்மை. ஆட்சியில் இருப்பவருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்று காத்திருக்கும் ஊடக, அரசியல், சந்தை வணிக அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் சதியில் ஆட்சியில் இருப்பவருக்கு சங்கடங்கள் ஒருபுறம். மற்றொருபுறம் மக்களுக்கு தேவைகளுக்கு எதிரான போக்கிலே அவர்களை அல்லலில் ஆழ்த்துவது வேறு..

கள்ளச் சந்தை வணிகம் பற்றிய இவ்வரிகள், அவற்றில் ஈடுபட்டோர்க்கு சரியான சாட்டையடி.. ஆனால் கல்லுளி மங்கன்களுக்கு இதெல்லாம் என்ன ஒரு பொருட்டா?

செம்மையிம் இகந்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 14 : 14 – 15
பொருள்:
நேர்மையான வழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் வாழும்போதும் இறந்தபின்னும் அவர்க்குப் பகையாக விளங்கும் என்ற உண்மையை அறியாயோ நீ !. 
அத்தகைய கள்ளச் சந்தை கள்ளர்களுக்கு, உடன்போகுவோர்க்குமான பாடல்:

நேர்நின்று ஈட்டார் நிறைநின் றொழுகாராம்
சீர்கெட்டு யாப்பாரே செல்வத்தை - பார்மீது
யார்கேட்பார் என்றே! இறையுண்டு! சேர்த்துவைத்து
தீர்க்கும்நாள் கட்டையில்போம் நாள்.

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -4

ஏதோ பல நூற்றாண்டு காலங்கள் வாழ்ந்திருக்கப்போகிறோம் என்று பலரும் ஆடும் கூத்து சங்ககாலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. நல்லோரை சேர்ந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, வயதாகி கிழத்தன்மை வருவதும், முடிவில் இறப்பதும் எல்லோருக்கும் நேர்வது, அதனால் அவற்றை மறந்திருக்கும் அறிவில்லார் கூட்டை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் கலித்தொகை வரிகள்..
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
மாற்றுமை கொண்ட வழி.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 12 : 18 – 19
இவ்வரிகளின் உள்ளுரைக் கருத்து:
நமக்கு வருகின்ற கூற்றத்தையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழிச் செல்லாமல், அவ்வழியினின்று விலகி நன்மக்கள் வழியினை நினக்கு வழியாகப் பேணவும்.
இன்றும் இதே காட்சியைத்தானே வேறு வேறு விதங்களில் பார்க்கிறோம்.. எத்தனைச் சொன்னால்தான் என்ன? எத்தர்களை மாற்றுவேன் என்பது நம்மையே ஏமாற்றிக்கொள்வதுதானோ! ஆனாலும் ஆறுதல் என்னவென்றால்… மனிதன் மாறிவிட்டான் என்பது உண்மையல்ல. மனிதன் அன்றேபோல் இன்றும்.. என்றும்! 
அன்றும் நல்லுரைகள் தேவைப்பட்டன! இன்றும் அதே சங்கை நாமும் ஊதுவோம். கொள்ளுவோர் கொள்ளட்டும்.
என்றும் இருப்பார்போல் எத்தனை ஆட்டங்கள்
இன்றுளார் நாளை இருப்பாரோ? - தின்றுநம்மை
திண்ணமாய் காலனும் மூப்பும் அழிக்குமே
எண்ணியதை நல்லோரைக் கூடு

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -3

தமிழைத் தலைமேல் வைத்துத் தாங்கும் பகுத்தறிவுக் கூட்டத்தினர் தமிழகத்தில் ஏதோ அந்தணர்களால்தான் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன என்று பேசுகிறார்களே. சங்க இலக்கியங்களிலேயே நிமித்தம் பார்ப்பது போன்றவைப் பேசப்பட்டன.. கீழ்காணும் கலித்தொகை தரும் செய்தியைப் பாருங்கள்.. ஒன்று அவர்கள் பேசும் பழம் பெருமை நிராகரிக்கப்படவேண்டியது; அல்லது அவர்களது பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சார்ந்த அறிவு குறைபட்டது.

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 11 : 21 – 22

இவ்வரிகளின் பொருள்:
தோழி ! நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் – நமது புனைந்த நலத்தைக் கெடுப்பவர் அல்லர் - காரணம் என்னெனில் நம்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்தி கூறின – நல்ல அழகை உடைய மையுண் இடது கண்ணும் துடித்தது காண்.
தொல்காப்பியர் காலம் தொட்டே நிமித்தம் பார்த்தல் நிகழ்ந்து வருகிறது. பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன என்றால் அது நல்ல இடத்தில் ஒலிக்க வேண்டும். ( மேலும் காண்க : அகநா . 9. 151.) கண்ணும் துடித்தது
பெண்களுக்கு இடக் கண்ணும் ஆண்களுக்கு வலக் கண்ணும் துடித்தல் நன்னிமித்தம் ஆகும் ; மாறித் துடித்தால் தீ நிமித்தம் ஆகும்.
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்………………….
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன………... (சிலம்பு -5)
நிமித்தங்களில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இருப்பவர்களை ஏளனம் செய்பவர்களுக்காக ஒரு பாடல்:

பல்லியின் பாட்டிலும் கண்கள் துடித்தலிலும்
வல்ல நிமித்தங்கள் காணலாம் - இல்லையென்
பார்சற்று பார்த்து இலக்கியச் சான்றுகளை
தேர்ந்தபின் கூறட்டு மே!

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -2

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித்தொகை. 6 :10 – 11

நெடுந்தகாய் ! கடுமையான வழிகளைக் கடந்து பொருள் தேடச்செல்கிறாய் ; நும்முடைய துன்பத்திற்குத் துணையாக எம்மையும் இட்டுச் செல்வதை விட வேறோர் இன்பமும் எமக்கு உண்டோ ? – தலைவி.
அதாவது தலைவி தன் காதற்தலைவனிடம் இவ்வாறு சொல்லுவாளாம்..!

காட்டுவழி காதங்கள் நீகடந்து சென்றுபொருள்
ஈட்டும்நின் துன்பில் துணையாவேன் - வாட்டமின்றி
நாட்டமோ டென்னைநீ கூட்டிச்சென் றாலதனின்
ஈட்டுமின்ப முண்டோ எனக்கு?
அன்று அப்படித்தான் எதிர்ப்பார்த்தார்களோ என்னவோ!… ஆனால் இன்றைய காட்சியோ இப்படியன்றோ இருக்கிறது? 

வீட்டிலே வெட்டியாக வீற்றிருக் காமல்நீ
மூட்டையைக் கட்டு முனைப்போடு - ஈட்டினால்
ஊட்டம் உனக்குண்டு உப்போடு அன்றிநான்
ஓட்டம்தான் உன்னையே விட்டு
அவர்கள் இப்படிச் செய்வதிலும் தவறில்லைதான்.. இல்லைன்னா பாதிப் பசங்க வெட்டியாய்தானே திரிவானுங்க!

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -1

பழங்கால இலக்கியங்களைப் படிக்கும் போது, அன்றைய சிந்தனைகளிலிருந்து உலகம் எப்படி மாறிவிட்டது என்பது புரிகிறது. ஒருபுறம் நாம் அவற்றைக் கொண்டாடுகிறோம்.. மற்றொருபுறம், காலத்தின் கட்டாயத்தில் அவற்றையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம்.. நகைச்சுவைக்காகவாவது நாம் அவற்றையெல்லாம் படிக்கவேண்டும்...

இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேயத்து முயன்று செய் பொருளே.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 7 : 20 - 21

பொருள்:
தலைவ ! நீ பொருள் ஈட்ட முயன்று ; கருதிச் செல்லும் தேயத்து நீ ஈட்டும் பொருள் இன்பம் தருமேயன்றி ; இழந்த இவள் இனிய உயிரை மீட்டுத் தருமோ? ( நின் பிரிவால் தலைவி இறந்துவடுவாள் என்றாள் தோழி)

இன்றோ தலைவி தலைவனிடம் சொல்வது இதுவாகத்தான் இருக்கமுடியும்...

என்னுயிர் வாழநீ ஈட்டுக செல்வமே!
உன்னுயிர் வாடினும் நான்வாழ நன்றாய்
புரத்தலே உன்கட னாம்பொரு ளின்றி

சிரத்தைநீ காட்டாதே செல் 

குறளின் குரல் - 1290

31st Oct, 2015

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

                           (குறள் 1284: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

ஊடற்கண் சென்றேன்மன் - பிரிந்து வந்த தலைவனை காண்பதற்குமுன் ஊடவே நினைந்தேன்
தோழி அதுமறந்து - தோழியே இப்போது அதை மறந்து (அவன் நேரில் வந்தபோது)
கூடற்கண் சென்றது - அவனை கூடியிருக்க அவன்பால் சென்றது
என்னெஞ்சு - என்னுடைய உள்ளமோ!

தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து மீண்டும் வந்து, தலைவி அவனை இன்னும் காண்பதற்குமுன், அவனோடு ஊடலிலிருக்கவே நினைந்தாள். ஆனால் அவனைக் கண்டபோது, அவள் உள்ளமானது நெகிழ்ந்து அவனோடு முயங்கியிருக்கக் கூட செல்லுகிறது என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள். சிந்திப்பதால் அவனுடைய பிரிவு கோபத்தைத் தருகிறது. ஆனால் உள்ளம் அப்படியல்ல.. சிந்தனையை ஒதுக்கிவிட்டு உணர்வின் அடிப்படையிலேயே இயங்குவது. காதலைப் பொருத்தவரை இதயமே வெல்கிறது.

Transliteration:

UdARkaN senRENman tOzi adumaRandu
kUDARkaN senRaduen nenju

UdARkaN senRENman – mind went towards love-quarrel with my returning husband
tOzi adumaRandu – But dear fried, forgetting the resolve
kUDARkaN senRadu – went towards seeking his embrace and coition
en nenju – my heart.

When her beloved returns after leaving her for a while, the maiden wants to show her anger to him; but on seeing him in person, her heart melted and went to him for an embrace of coition..

Mind being a thinking state, it upsets the woman about her husband leaving. But the heart is so soaked in emotive quality.

“My mind went towards love quarrel before seeing my beloved
 But, my heart sought his embrace of coition, anger discarded”

இன்றெனது குறள்:

ஊடவே நான்நினைந்தேன் என்தோழி உள்ளமோ
கூடலையே நாடிச்செல் லும்

UDalE nAnninaindEn enthOzi uLLamO
kUDalaiyE nADichchel lum

அக்டோபர் 30, 2015

குறளின் குரல் - 1289

30th Oct, 2015

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

                           (குறள் 1283: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

பேணாது - என் விருப்பைக் கருதி ஓம்பார்
பெட்பவே செய்யினும் - தாம் விரும்பியதையே செய்தாலும்
கொண்கனைக் - என் அன்பரைக்
காணாது அமையல - காணது அமைதியுறா என்னுடைய
கண் - கண்கள்.

தன் அன்பர் தன்னலம் மட்டும் பாராட்டி தனது விருப்பங்களைச் சற்றும் கருத்தில் கொண்டு ஓம்பார் என்றாலும், அவரைக் காணாமல் காதற்தலைவியின் கண்கள் அமைதி கொள்வதில்லையாம். அவர் சென்ற வழி நோக்கி, வரும் நாளை பார்த்திருக்கும் என்று தன் தோழிக்குக் கூறுகிறாள் காதற்தலைவி. 

இந்நிலையைப் பல இலக்கியப் பாடல்களும் சுட்டுகின்றன.

“துனிநீர் கூட்டமொடு துன்னாராயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்” என்று நற்றிணை (216:1-2) பாடல் கூறுவதும்,

“காதலர் நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக்கினிதே” என்று குறுந்தொகை (60:4-6) பாடல் கூறுவதும்,

“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்

கொடியவென் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்” என்று திருவாய்மொழி (5.3:5) பாடல் கூறுவது இந் நிலையைத்தான்.

Transliteration:

pENAdu peTpavE seyyinum kONkanaik
kANA damayala kaN”

pENAdu – though not considering my desires
peTpavE seyyinum – doing what he pleases
kONkanaik – without seeing my dear husband
kANAd(u) amayala – will not rest without seeing him
kaN – my eyes

“Though my beloved husband, takes care of his desires exclusively and does not care for my desires, still my eyes will not rest until they see him again”, says the maiden to her friend, looking forward to his return. Though the maiden may be upset and exhibit anger, frustration etc., her eyes still are looking forward to his return.

This is a familiar situation and them depicted in many literature of almost same period and later too. naRRinai, kuRuntogai and thiruvAimozh are some of the works where the thought of this verse have been said.

“Though he not taking care of my desires, but only his,
 shall not rest until the return of my husband, my eyes”

இன்றெனது குறள்:

அன்பரைக் காணாதோ யாதென்கண் காவாது
தன்விருப்பே தாம்செய்யி னும்

(அன்பரைக் காணாது ஓயாது என்கண் காவாது தன்விருப்பே தாம் செய்யினும்)

anbaraik kANAdO yAthenkaN kAvAdu
thanviruppE tAmseiyin num

அக்டோபர் 29, 2015

குறளின் குரல் - 1288

29th Oct, 2015

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

                           (குறள் 1282: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

தினைத்துணையும் - ஒரு சிறு தினை அளவுக்குக் கூட
ஊடாமை வேண்டும் - ஊடல் கொள்ளக்கூடாது
பனைத்துணையும் - பனை மரத்தளவுக்கு உயர்ந்து வளர்ந்து
காமம் நிறைய வரின்.- காம வேட்கையானது, அதனினும் மிக்கு வருமாயின்

இக்குறள் இருபாலருக்குமே பொருந்துவதாகவே இருப்பினும், தலைவன் பிரிந்து செல்லும் குறிப்பறிந்து ஊடுதல் என்பது காதற்தலைவியருக்கே பொருந்துமாதலின், தலைவியை மையப்படுத்தியே இக்குறள் சொல்லப்பட்டதாக கருதலாம்.

தினையென்பது ஒரு சிறிய உணவு தானியம். அந்த அளவுக்குக்கூட காதற்தலைவி தன் காதலனோடு ஊடல் கொள்ளக்கூடாது. எப்போது? அவளது காம வேட்கையானது பனைமரத்தளவுக்கு உயர்ந்து அதனினும் மிக்கு வளர்ந்திருப்பின்! அப்போது அவள் ஊடி, அதனால் காதலனைக் கூடாமல், அவனும் பிரிந்த பிறகு, அவள் நெஞ்சம் மிக்க துயரத்துழலும், என்பதால், இது சொல்லப்பட்டது.

Transliteration:

tinaittuNaiyum UDAmai vENDum panaittuNaiyum
kAmam niRaiya varin

tinaittuNaiyum – even to the extent of tiny millet grain
UDAmai vENDum – shall not have love quarrel
panaittuNaiyum – if as tall as palmyra tree
kAmam niRaiya varin – the desire for coition is there in excess.

Though this verse sounds common to both genders, to be in love-quarrel with her beloved is typical of maiden in love, when her beloved leaves her on his work, it is construed to be said from her point of view.

A maiden shall not be in love quarrel with her beloved even to the extent of the tiny millet grain; especially when her desire for coition or union with her beloved is taller than the palmyra tree; why so? Perhaps because she will be the one to suffer subsequent to his leaving her, if she passes the opportunity to be in amorous union when her desire is high, because she her anger about his impending departure.

“You shall not have even a tiny millet grain sized pretense fight
 when the desire for coition is as tall as palmyra trees’s height”

இன்றெனது குறள்:

கடுகளவும் ஊடல் கருதற்க காமம்
நெடுநீர்போல் மிக்கு வரின்

(நெடுநீர் - கடல்)

kaDugaLavum UDal karudaRka kAmam
neDunIrpOl mikku varin

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...