प्राकाश्यं परमेश्वरप्रणयिनि त्वन्मन्दहासश्रियः
श्रीकामाक्षि मम क्षिणोतु ममतावैचक्षणीमक्षयाम् ।
यद्भीत्येव निलीयते हिमकरो मेघोदरे शुक्तिका-
गर्भे मौक्तिकमण्डली च सरसीमध्ये मृणाली च सा ॥ ७४॥
ப்ராகாஶ்யம் பரமேஶ்வர ப்ரணயினி த்வன் மந்த³ஹாஸ ஶ்ரிய:
ஸ்ரீ காமாக்ஷி! மம க்ஷிணோது மமதா வைசக்ஷணீ மக்ஷயாம் ।
யத்³பீ⁴த்யேவ நிலீயதே ஹிமகரோ மேகோ⁴த³ரே ஶுக்திகா-
க³ர்பே⁴ மௌக்திக மண்ட³லீ ச ஸரஸீமத்⁴யே ம்ருʼணாலீ ச ஸா ॥ 74॥
பரமேசுவரனின் உயிராயவளே! ஸ்ரீ
காமாக்ஷி! எந்த மென்னகையின் காந்தியின்மீதுள்ள அச்சத்தால் சந்திரன் மேகங்களின் வயிற்றிலும்,
முத்துக்களின் கூட்டமானது முத்துச் சிப்பிகளின் கருவிலும், அத்தாமரைத் தண்டும் தடாகத்தின்
நடுவிலும் ஒளிந்துகொள்ளுகிறதோ, அந்த உனது மென்னகைக் காந்தியின் வெள்ளொளியானது, என்னுடைய
அழியாது வளர் செருக்கின் திறமையை அழிக்கட்டும்.
காமாட்சீ! ஈசர்க்குக் காதலி! என்னகைக் காந்திமீது
வீமத்தால் சந்திரன் மேகக் கருவிலும், வெண்மணிகள்
ஊமைக் கருவிலும், ஒண்டாம ரையரை ஓடையிலும்
தாமொளி கின்றவோ, தண்டழித் தேசெய்க சற்றவையே!
வீமம்-அச்சம்; கரு-வயிறு; வெண்மணிகள்-
முத்துக்கள்; ஊமை-சிப்பி; அரை-தண்டு;
ஓடை-குளம்; தண்டு-செருக்கு
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
காமாட்சீ! ஈசர்க்குக் காதலி! என்னகைக் காந்திமீது, வீமத்தால் சந்திரன் மேகக் கருவிலும், வெண்மணிகள் ஊமைக் கருவிலும், ஒண்டாமரை அரை ஓடையிலும் தாமொளிகின்றவோ, தண்டு அழித்தே செய்க சற்றவையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam