कामाक्षि कल्पविटपीव भवत्कटाक्षो
दित्सुः समस्तविभवं नमतां नराणाम् ।
भृङ्गस्य नीलनलिनस्य च कान्तिसम्प-
त्सर्वस्वमेव हरतीति परं विचित्रम् ॥98॥
காமாக்ஷி கல்பவிடபீவ பவத்கடாக்ஷோ
தித்ஸு: ஸமஸ்தவிபவம் நமதாம் நராணாம் |
ப்ருங்கஸ்ய நீல நலினஸ்ய ச காந்திஸம்ப-
த்ஸர்வஸ்வமேவ ஹரதீதி பரம் விசித்ரம் ||98||
காமாக்ஷியே! உன் கடைக்கண்ணாயது, கற்பகத்
தருபோல், பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் தருகிறது! ஆயின் அது வண்டு மற்றும், கருநெய்தல்
மலர்களதுமான எல்லா சொத்தினையும் பறித்துக்கொள்வது, விந்தையே!
கற்பகம் போலுன் கடைக்கண்கா மாட்சீ! கனிந்தருளும்,
பொற்பதம் தன்னையே போற்றுமாந் தர்க்குப் புகலளித்து!
முற்றிலும் விந்தையே ஆயினும், காந்தியாம் ஆதனத்தை
வற்றப் பறிக்குதே வண்டிற்கே! நெய்தல் மலரதற்கே!
ஆதனம்- ஆஸ்தி;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam