अज्ञातभक्तिरसमप्रसरद्विवेक-
मत्यन्तगर्वमनधीतसमस्तशास्त्रम् ।
अप्राप्तसत्यमसमीपगतं च मुक्तेः
कामाक्षि नैव तव काङ्ष्हति दृष्टिपातः ॥99॥
அஜ்ஞாத பக்திரஸமப்ரஸரத் விவேக-
மத்யந்தகர்வமனதீத ஸமஸ்த ஶாஸ்த்ரம் |
அப்ராப்த ஸத்யமஸமீபகதம் ச முக்தே:
காமாக்ஷி நைவ தவ காங்ஷதி த்ருஷ்டிபாத: ||99||
காமாக்ஷீ! உனது
கடைக்கண் பார்வை, பக்தியின் சுவை அறியாதவனை, பகுத்து உணரும் அறிவு இல்லாதவனை, செருக்குடையவனை,
சாத்திரம் கல்லாதவனை, சத்தியமில்லாதவனை, உன்னருகில் வராதவனை விரும்புவதில்லை. வேறு
விதமாக சிந்தித்தால், தேவியின் கடைக்கண் பார்வையருள் இல்லானுக்கு, பக்தியோ, பகுத்தறிவோ,
சத்தியமோ, சாத்திரம் கற்பதோ, செருக்கின்மையோ, அவள் தாள் சேருமெண்ணமோ இருக்காது என்பதை
கவி உணர்த்துகிறார். கணேசய்யருடைய விளக்கவுரையில், இறுதியடியக்கு, “காமாக்ஷி மாம் அவது
தே கருணா கடாக்ஷ:” என்ற பாடமுண்டு என்கிறார். ஹே! காமாக்ஷி! கருணை நிறைந்த நின்பார்வை
என்னைக் காக்கட்டும் என்று பொருள்.
பத்திச் சுவையும் பகுத்து உணர்கின்ற பாங்குமின்றி
சத்திய மில்லாத சாத்திரம் கல்லாத தன்னடக்கச்
சித்தி யிலாத செருக்கில் அறிந்துனைச்
சேர்ந்திடாத
சித்தனை காமாட்சீ சீந்தாதுன் கண்கடைச்
சீதனமே!
சீந்தாது-விரும்பாது;
சீதனமே-திருச்செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam