अत्यन्तशीतलमनर्गलकर्मपाक-
काकोलहारि सुलभं सुमनोभिरेतत् ।
पीयूषमेव तव वीक्षणमम्ब किन्तु
कामाक्षि नीलमिदमित्ययमेव भेदः ॥100॥
அத்யந்த ஶீதலமனர்கல கர்மபாக-
காகோலஹாரி ஸுலபம் ஸுமனோபிரேதத் |
பீயூஷமேவ தவ வீக்ஷணமம்ப கின்து
காமாக்ஷி நீலமித மித்யயமேவ பேத: ||100||
காமாக்ஷி! உன் பார்வை, மிகவும் தண்ணுடைத்து;
தடையிலாமல் வளரும் தீவினைகளின் பலனான, காகோல நஞ்சினை போக்குவது;
நல்மனத்தோர்க்கு எளிதில் அடையக்கூடியது; ஆயினும் இது கருமை நிறத்ததென்பதே ஒரு தனித்தன்மைதானே!
குளிர்ச்சியாம் பனியும், நஞ்சின் முறிவாம் அமுதமும் நல்லமனமும் வெண்மை நிறத்தோடு பொருந்துவன;
இத்தகையா கடைக்கண் கருமையா? என்பதே தனித்தன்மை என்று வியக்கிறார் கவி!
காமாக்ஷீ உன்கடைக் கண்பார்வை தண்ணாம்; கரையிலாது
தாமோங்கும் தீவினை சங்கரக் காகோலம் தன்னைநீக்கும்;
தூமா மனமுடை தூயோர் எளிதினில் துன்னுவதாம்;
தாமோ கருநிறத் தாலாயிற் றேதனித் தன்மையன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam