செப்டம்பர் 17, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 100

अत्यन्तशीतलमनर्गलकर्मपाक-
काकोलहारि सुलभं सुमनोभिरेतत्
पीयूषमेव तव वीक्षणमम्ब किन्तु
कामाक्षि नीलमिदमित्ययमेव भेदः 100

அத்யந்த ஶீதலமனர்கல கர்மபாக-
காகோலஹாரி ஸுலபம் ஸுமனோபிரேதத் |
பீயூஷமேவ தவ வீக்ஷணமம்ப கின்து
காமாக்ஷி நீலமித மித்யயமேவ பேத: ||100||

காமாக்ஷி! உன் பார்வை, மிகவும் தண்ணுடைத்து; தடையிலாமல் வளரும் தீவினைகளின் பலனான, காகோல நஞ்சினை போக்குவது; நல்மனத்தோர்க்கு எளிதில் அடையக்கூடியது; ஆயினும் இது கருமை நிறத்ததென்பதே ஒரு தனித்தன்மைதானே! குளிர்ச்சியாம் பனியும், நஞ்சின் முறிவாம் அமுதமும் நல்லமனமும் வெண்மை நிறத்தோடு பொருந்துவன; இத்தகையா கடைக்கண் கருமையா? என்பதே தனித்தன்மை என்று வியக்கிறார் கவி!

காமாக்ஷீ உன்கடைக் கண்பார்வை தண்ணாம்; கரையிலாது
தாமோங்கும் தீவினை சங்கரக் காகோலம் தன்னைநீக்கும்;
தூமா மனமுடை தூயோர் எளிதினில் துன்னுவதாம்;
தாமோ கருநிறத் தாலாயிற் றேதனித் தன்மையன்றே!

தண் - குளிர்ச்சி; கரையிலாமல்-தடையிலாமல்; தாமோங்கும் - தாமே வளரும்; சங்கரம்-நஞ்சு; தூமா - தூய பெரிய; துன்னுவது - அடைவது; தாமோ - அதுவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...