செப்டம்பர் 14, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 97

यावत्कटाक्षरजनीसमयागमस्ते
कामाक्षि तावदचिरान्नमतां नराणाम्
आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब
संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे 97

யாவத் கடாக்ஷ ரஜனீ ஸமயாகமஸ்தே
காமாக்ஷி தாவதசிரான்னமதாம் நராணாம் |
ஆவிர்பவத் யம்ருததீதிதி பிம்பமம்ப
ஸம்வின்மயம் ஹ்ருதய பூர்வகிரீந்த்ர ஶ்ருங்கே ||97||

தாயே காமாக்ஷீ! உனது கருமையான கடைக்கண் பார்வையென்னும் இரவு நேரம், தொடங்கிய உடனேயே, உன்னை வணங்கும், மானுடருக்கு, ஞானமே வடிவாய சந்திரவிம்பமானது இதயமென்னும் உதய மலையின் சிகரத்தில் தோன்றுகிறது! அன்னையின் கடைக்கண் கிடைக்கப்பெற்ற அன்பருக்கு ஞானோதயம் ஏற்படுவதை இரவு நேரத்தில் சந்திர உதயத்தை உவமையாகச் சொல்லிக் கூறுகிறார் மூகர் இப்பாடலில்!

கருமையா முன்கடைக் கண்பார்வை யாகிய கங்குலெனும்
அருள்பூக்க, சேவிக்கும் அன்பர்க் களிசெய் அரியஞான
உருவாய், நிலவும் ஒளியுடன் தோன்றி, உதிக்குமுள்ள
பருவத உச்சியில், பார்க்கக்கா மாட்சீ, பரிந்துடனே!


கங்குல் - இரவு;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...