செப்டம்பர் 12, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 94

बाणेन पुष्पधनुषः परिकल्प्यमान-
त्राणेन भक्तमनसां करुणाकरेण
कोणेन कोमलदृशस्तव कामकोटि
शोणेन शोषय शिवे मम शोकसिन्धुम् 94

பாணேன புஷ்பதனுஷ: பரிகல்ப்யமான-
த்ராணேன பக்தமனஸாம் கருணாகரேண |
கோணேன கோமலத்ருஸ்தவ காமகோடி
ஶோணேன ஶோஷய ஶிவே மம ஶோகஸிந்தும் ||94||

ஹே! காமகோடீ! மங்களம் செய்யும் சிவையே! மன்மதனது அம்பாயும், பக்தர்களின் உள்ளங்களுக்கு காப்பளிப்பதும், கருணை நிறைந்ததுமான, உன்னுடைய கடைக்கண் ஓரத்தினால், எனது துயரக்கடலை வற்றிடும்படியாகச் செய்வாயாக!

மங்களம் நல்கும்சி வைகாம கோடியே! மன்மதனாம்
அங்கசன் அம்பாயும், அன்பர் அகங்களை ஆண்டுகாத்தும்
பொங்கும் கருணை புரியுமுன் கண்கடை பூரிதத்தால்
தங்காது வற்றயெம் தாபக் கடலும், தயையருளே!


அங்கசன் - மன்மதன்; பூரிதம்-மிகுகளிப்பு;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...