செப்டம்பர் 11, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 93

एषा तवाक्षिसुषमा विषमायुधस्य
नाराचवर्षलहरी नगराजकन्ये
शङ्के करोति शतधा हृदि धैर्यमुद्रां
श्रीकामकोटि यदसौ शिशिरांशुमौलेः 93

ஏஷா தவாக்ஷிஸுஷமா விஷமாயுதஸ்ய
நாராசவர்ஷ லஹரீ நகராஜகன்யே |
ம்கே கரோதி ததா ஹ்ருதி தைர்யமுத்ராம்
ஸ்ரீகாமகோடி யதஸௌ ஶிஶிராம்ஶு மௌலே: ||93||

மலையரசன் மகளே! திரு காமகோடி!  இந்த உன் பார்வையழகு மன்மதனின் இரும்பு அம்பின் வரிசையென்று நினைக்கிறேன்! ஏனெனில் இது பரமசிவனின் உள்ளத்தில் உறுதியை சுக்கு நூறாகச் சிதறச் செய்கிறது!

மலைய ரசனார் மகளே திருகா மகோடியளே,
விலையிலுன் பார்வையின் வீச்ச தனங்கனின் வில்லிருந்து
நிலைநீங் குசர நிரைபோலு மென்றே நினைக்கிறேன்யான்!
குலைப்பதால் கூத்தர்க் குறுதி சிதறக் குறைத்ததுவே!


சரம்-அம்பு; நிரை-வரிசை; குலைத்து - அழித்து; கூத்தர்-சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...