मारद्रुहा मुकुटसीमनि लाल्यमाने
मन्दाकिनीपयसि ते कुटिलं चरिष्णुः ।
कामाक्षि कोपरभसाद्वलमानमीन-
सन्देहमङ्कुरयति क्षणमक्षिपातः ॥95॥
மாரத்ருஹா முகுடஸீமனி லால்யமானே
மன்தாகினீபயஸி தே குடிலம் சரிஷ்ணு: |
காமாக்ஷி கோபரபஸாத் வலமான மீன-
ஸன்தேஹமங்குரயதி க்ஷணமக்ஷிபாத: ||95||
ஹே காமாக்ஷி! மாரவைரியின்
முடிமீது கொண்டாடப்படுகிற மந்தாகினி நீரின்மேல் கொண்ட சினத்தின் துடிப்பால் கோணலாக
செல்லும் உன் பார்வை (ஓரப்பார்வை), அங்குமிங்கும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும்
மீனோ என்னும் ஐயத்தை நொடியில் தோற்றுவிக்கிறதே!
மாரனின் வைரியார் மாதேவர் தன்மேல் மகத்துவாமாய்
தாரம்போல் நின்றமந் தாகினி நீர்மேல் சலமதனால்
ஓரப்பார் வைதனை ஓட்டுமாம், காமாட்சீ,
உன்விழிகள்,
நீரலை மீனென்று நெஞ்சம் கணத்தில் நினைக்கிறதே!
மகத்துவம் - பெருமை;
தாரம்-மனையாள்; சலம்-சினம்; ஓரப்பார்வை-கடைவிழி நோக்கு;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam