ஜூன் 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -77

यस्या वाटी हृदयकमलं कौसुमी योगभाजां
यस्याः पीठी सततशिशिरा शीकरैर्माकरन्दैः
यस्याः पेटी श्रुतिपरिचलन्मौलिरत्नस्य काञ्ची
सा मे सोमाभरणमहिषी साधयेत्काङ्क्षितानि ७७॥

யஸ்யா வாடீ ஹ்ருʼ³ய கமலம் கௌஸுமீ யோக³பாஜாம்
யஸ்யா: பீடீ² ஸததஶிஶிரா ஶீகரைர் மாகரந்தை:³
யஸ்யா: பேடீ ஶ்ருதிபரிசலன் மௌலிரத்னஸ்ய காஞ்சீ
ஸா மே ஸோமாபரண மஹிஷீ ஸாதயேத் காங்க்ஷிதானி 77

எவள் யோகிகளின் இதயத்தாமரைப் பூந்தோட்டம் கொண்டாளோ, எவள் எப்போதும் தேன்பெருக்கால் குளிர்ந்த பங்கஜாசனம் கொண்டாளோ,
எவள் வேதங்களின் முடிமணியாக உள்ளாளோ, எவள் காஞ்சியைத் தன் பெட்டகமாகக் கொண்டாளோ, மதியணி ஈசன் மனையாம் அவள் என்னுடைய இட்டங்களை நிறைவு செய்யட்டுமே

எவள்யோகி யர்தம் இதயாம்பு யப்பொழில் ஏற்றவளோ,
எவளென்றும் தேனோத ஈரகற் காசனம் ஏற்றவளோ,
எவள்வேத சூடிகை என்பதோ, காஞ்சியை ஏற்றகாவோ,
அவள்மதி சூடி அரன்மனை, என்னாசை ஆர்க்கயின்றே!  

பொழில்-பூந்தோட்டம்; ஓதம்-பெருக்கு; ஈர-குளிர்ச்சி; கற்கம்-தாமரை; சூடிகை-மணிமுடி; கா-பெட்டகம்; அரன்மனை-ஈசன் மனைவி; ஆர்க்க-நிறைவு செய்க.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

எவள் யோகியர்தம் இதயாம்புயப் பொழில் ஏற்றவளோ, எவள் என்றும் தேன் ஓத ஈர கற்க ஆசனம் ஏற்றவளோ, எவள் வேத சூடிகை என்பதோ, காஞ்சியை ஏற்ற காவோ, அவள், மதிசூடி அரன் மனை, என்னாசை ஆர்க்கயின்றே! 

ஜூன் 25, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -76

धन्या धन्या गतिरिह गिरां देवि कामाक्षि यन्मे
निन्द्यां भिन्द्यात्सपदि जडतां कल्मषादुन्मिषन्तीम्
साध्वी माध्वीरसमधुरताभञ्जिनी मञ्जुरीतिः
वाणीवेणी झटिति वृणुतात्स्वर्धुनीस्पर्धिनी माम् ७६॥

ன்யா ன்யா ³திரிஹ கி³ராம் தே³வி! காமாக்ஷி! யன்மே
நிந்த்³யாம் பிந்த்³யாத் ஸபதி³ ஜட³தாம் கல்மஷாது³ன்மிஷந்தீம்
ஸாத்வீ மாத்வீரஸ மதுரதா பஞ்ஜினீ மஞ்ஜுரீதி:
வாணீ வேணீ டிதி வ்ருʼணுதாத் ஸ்வர்துனீ ஸ்பர்தினீ மாம் 76

தேவி காமாக்ஷி! பாவங்களிலிருந்து உதிக்கும், நிந்திக்கத்தக்க என்னுடைய அறியாமையை விரைந்து போக்கும், அழகியதும், தேனினும் இனிய, தேவ கங்கைப்பெருக்கிற்கு இணையான, அழகின் முறையுள்ளதான வாக்கின் வரிசையானது என்னை விரைவில் வரித்து, மிகவும் மேன்மையாயுள்ள கவிப்பெருக்கானது எனக்கு உண்டாக வேண்டும்!

பாவத் துதிக்கும் பழிகொள் அறியாமை பாய்ந்துநீங்க,
தேவகங் கைக்கீடும், தேனினின் கங்கையாம் தீர்த்தவாலை
மேவ, அழகதன் வீதியாம் சொன்முறை வேகமென்னில்
பாவ, எனக்குயர் பாவன்மை காமாட்சீ! பற்றுகவே!

பாய்ந்து-விரைந்து; ஈடு-இணை; ஆல்-வெள்ளம்/பெருக்கு; மேவ-ஓங்க; வீதி-வரிசை, பாவ-பரவ;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பாவத்து உதிக்கும் பழிகொள் அறியாமை பாய்ந்து நீங்க, தேவ கங்கைக்கு ஈடும், தேனின் இன் கங்கையாம் தீர்த்த ஆலை மேவ, அழகதன் வீதியாம் சொன்முறை வேகம் என்னில் பாவ, எனக்குயர் பாவன்மை, காமாட்சீ! பற்றுகவே!

ஜூன் 24, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -75

येन ख्यातो भवति गृही पूरुषो मेरुधन्वा
यद्दृक्कोणे मदननिगमप्राभवं बोभवीति
यत्प्रीत्यैव त्रिजगदधिपो जृम्भते किम्पचानः
कम्पातीरे जयति महान्कश्चिदोजोविशेषः ७५॥

யேன க்²யாதோ வதி க்³ருʼஹீ பூருஷோ மேருதன்வா
யத்³ த்³ருʼக்கோணே மத³நி³ம ப்ராபவம் போ³வீதி
யத்ப்ரீத்யைவ த்ரிஜக³³திபோ ஜ்ருʼம்பதே கிம்பசான:
கம்பாதீரே ஜயதி மஹான் கஶ்சிதோ³ஜோ விஶேஷ: 75

எப்பெருமைக்கு, மேருவை வில்லாய் கொண்ட பரம்பொருள் இல்லாளனாகிறானோ, எப்பொலிவின் கடைக் கண்களில் மதனாகமப் பெருமை வெளியாகிறதோ, எதன் கிருபையாலே பரம ஏழைகூட மூவுலகின் அதிபனாக வளர்கிறானோ, அத்தகு சிறப்பான பொலிவு கம்பைக் கரையிலே பெரிதாக விளங்குகிறது.

எக்கதழ் வுக்கே இமயவில் லீசனார் இல்லறனோ,
எக்கலிப் பின்விழி ஈற்றில் மதன்வேதம் ஈடுறுமோ,
எக்கிரு பையினால் ஏழையும் ஈசனாய் ஏறுவனோ,
அக்கடிக் காந்தி அடைக்கம்பை துங்கமாய் ஆகிறதே!

கதழ்வு,ஈடு-பெருமை; இல்லறன்-கணவன்; கலிப்பு,காந்தி-பொலிவு; ஈசன்- அதிபன்; ஏறுதல்-உயர்தல்; கடி-சிறப்பு; அடை-கரை; துங்கம்-உயர்வு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

எக் கதழ்வுக்கே இமய வில் ஈசனார் இல்லறனோ, எக் கலிப்பின் விழி ஈற்றில் மதன்வேதம் ஈடுறுமோ, எக் கிருபையினால் ஏழையும் ஈசனாய் ஏறுவனோ, அக் கடிக் காந்தி அடைக் கம்பை துங்கமாய் ஆகிறதே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...